புரமோஷனுக்காக ரூ 2.5 லட்சம் கொடுத்துட்டு வந்திருக்கேன்.. பகீர் தகவலை சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்
சென்னை: என்னங்க இது அநியாயம் புரமோஷனுக்காக மட்டும் ரூ 2.5 லட்சம் செலவு செய்துள்ளதாக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் தங்கும் போட்டியாளர்களில் கடைசி வரை வீட்டில் யார் தங்குகிறார்களோ அவர்தான் போட்டியின் வெற்றியாளராவார்.
ஒவ்வொரு முறை எவிக்ஷனுக்கு வரும் போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பர். அவர்களில் யாருக்கு வாக்குகள் குறைவாக இருக்கிறதோ அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.
ஆஸ்திரேலியாவில் கந்த சஷ்டி.. சூரபத்மனை சம்ஹாரம் செய்த சிட்னி முருகன்
மக்கள் மனம்
இதனால் மக்கள் மனதில் இடம்பிடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து போட்டியை சேஃப்பாக விளையாடுவதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் என்னதான் புகழ் பெற்றவர்கள் உள்ளே வந்தாலும் அவர்களுடைய நடவடிக்கைகளை வைத்துதான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் ஓவியா
இப்படித்தான் பிக்பாஸ் ஓவியாவுக்கு ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள். இதன் பின்னர் வந்த சீசன்களில் கூட சில போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கினாலும் ஓவியாவுக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கு வேறு யாருக்குமே கிடைக்கவில்லை என்பதை மறுக்கவே முடியாது. மேலும் சிலர் பணம் கொடுத்து தங்களை பிரமோஷன் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 6
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6-இல் கலந்து கொண்டுள்ள ராம் ராமசாமி, தனது பிரமோஷனுக்காக ரூ 2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் இப்படித்தான் பணம் கொடுத்து பிரமோஷன் செய்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாக்குகளுக்கு என்ன பலன்
இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவருமே ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். ராபர்ட் மாஸ்டர் கமலிடம் தான் ஒரு சிங்கிள் என கூறிவிட்டு தனக்கு 22 வயதில் காதலி இருப்பதாக சக போட்டியாளரிடம் சொல்கிறார். அது போல் ராம் காசு கொடுத்து பிரமோஷன் செய்வதாக கூறுகிறார். இதனால் மக்களின் வாக்குகளுக்கு என்ன பலன் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.