Thirumanam Serial: என்னாது அனிதாவை காணோமா? நவீனையுமா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் அந்த டிவியின் ஹிட் சீரியல், சந்தோஷ் ஜனனிக்காக அந்த சீரியலை விரும்பி பார்த்தவர்கள் நிறைய பேர்.
ஜனனி, சந்தோஷ் இருவரும் திருமணம் முடிந்து கணவன் மனைவியாக வாழ்வார்களா என்று நினைக்கவே நிஜத்தில் ஒரு வருடத்துக்கும் மேலாகியது.
ஒரு வழியாக சந்தோஷ் தன் காதலி சக்தியின் சுயரூபம் தெரிந்து ஜனனியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வருவதற்குள் ஜனனி சந்தோஷின் சுயரூபத்தை தெரிந்து ஒதுங்கி வாழ ஆரம்பித்து இருந்தாள்.

அனிதா நவீன்
ஜனனியின் தங்கை அனிதா மாமா சந்தோஷின் தம்பி நவீனை காதலித்தாள். ஜனனி கூடாது என்று கண்டித்து, அப்பாவின் விருப்பப்படி அத்தை மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளை சம்மதிக்க வைத்து இருந்தாள். அனிதாவும் சம்மதித்து இருந்த வேளையில்தான் நவீனுடன் அனிதாவுக்கு காதல் மலர்ந்து இருந்தது.

அனிதா நவீன்
அனிதாவுக்கு நவீனை மறக்க முடியாத இக்கட்டான சூழல். அனாமிகாவா போனில் பேசி நவீனின் மனதில் இடம் பிடித்த அனிதாவை நவீனாலும் மறக்க முடியவில்லை. அண்ணி ஜனனி இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்ல, சந்தோஷ் ஏங்க இப்படி சொல்றீங்க என்று தம்பிக்கு சப்போர்ட் செய்தாலும் இப்போது அனிதாவின் கல்யாணம் அத்தை பையனுடன்தான் என்று உறுதியாகி விட்டது.

அனிதா நவீனை காணோம்
இப்போது கல்யாண மண்டபத்தில் அனிதாவை காணவில்லை என்று அனிதா ஜனனியின் அண்ணி சொல்லிக்கொண்டு இருக்க, ஜனனி பதட்டமாகி சந்தோஷுக்கு போன் செய்து பக்கத்துக்கு அறைக்கு வாங்க என்று சொல்லி வரவழைச்சு அனிதாவை காணோம் என்று சொல்ல, இங்கே நவீனை காணோம்னு தேடறேன்னு சந்தோஷ் சொல்றான்.

நலுங்கு வைக்க
எண்ணெய் நலுங்கு வைக்க பொண்ண அழைச்சுண்டு வாங்கோன்னு அய்யர் கூப்பிடறார். எங்கே பொண்ணு இருக்குன்னு யாருக்கு தெரியும்? இது மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் சிக்க வச்சுட்டு பொண்ணுங்க முடிவு எடுக்கறதுக்கு பதில் முன்னாலேயே யோசிச்சு முடிவு எடுத்தால்ல் யாருக்கும் எந்த சிரமும் இருக்காது பாருங்க...!












Click it and Unblock the Notifications