இதயம் ஹீராவை ஞாபகமிருக்கா? அப்பவே கிளாஸ் எடுத்து அசத்திய நடிகை.. திரையில் விலக இவரா காரணம்: பிரபலம்
சென்னை: 49 வயதாகும் பிரபல நடிகை ஹீரோ, மொத்தம் 49 படங்களில் நடித்திருக்கிறார்.. ஒரு வடமாநில நபரை திருமணம் செய்ததாக சொன்னார்கள்.. அது ரகசியமாகவே முடிந்துவிட்டது.. இப்போது சிங்கிளாகவே இருக்கிறார்.. அமெரிக்காவில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.. சைக்காலஜி படித்துள்ளதால், அப்போதே நிறைய பள்ளிகளுக்கு சென்று உளவியல் விஷயங்கள் குறித்து பேசுவார்" என்கிறார சபிதா ஜோசப்.
Cineulagam என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப், "பொதுவாக வடமாநிலத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு, பிரபல நடிகர்கள் அல்லது டைரக்டர்கள் பாதுகாப்பாக, அரணாக இருப்பார்கள். காரணம், சில ஹீரோக்களின் டார்ச்சர்கள் அவர்களுக்கு இருக்கக்கூடும் அல்லது ரவுடிகள் உள்ளிட்ட தொந்தரவுகளிலிருந்து தப்பித்து கொள்வதற்காக இப்படி சில நடிகைகள் யாராவது ஒரு பிரபலத்துடன் நட்பாக இருப்பது வழக்கம்.
ஆனால், நடிகை ஹீரா மிகவும் துணிச்சலானவர்.. வெளிப்படையாக பேசக்கூடியவர்.. இதயம் படம்தான் இன்றைக்கு வரைக்கும் பேசக்கூடிய படமாக ஹீராவுக்கு உள்ளது .. அந்த படத்தில் போடடோகிராபி, முதல் பாடல் வரை இன்றுவரை பேசப்படுகிறது. அதுபோன்ற படங்கள் ஹீராவுக்கு அமையவில்லை..

பெரிய ஹீரோக்கள்
இரண்டாம் ஹீரோயின் கேரக்டர்களாகவே அதிகம் அவருக்கு வந்தது.. தனக்கான கேரக்டர் எது நல்லா இருக்கும்? என்று தேர்வு செய்துதான் நடித்தார்.. அவ்வை சண்முகி, சதிலீலாவதி, காதல் கோட்டை போன்ற படங்களை அப்படித்தான் தேர்வு செய்தார்.. இதுபோல இன்னும் பட வாய்ப்புகள் அவருக்கு வந்தாலும், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கக்கூடிய வாய்ப்புகளாக வரவில்லை.. நடித்தால் பெரிய ஹீரோவுடன் நடிக்கவும் காத்திருந்தார்..
காதல் தோல்வி
இதற்கு நடுவில்தான், அஜித்துடன், ஹீரா நட்பானார்.. இருவருமே ஆங்கிலத்தில் நிறைய பேசி கொண்டேயிருப்பார்கள். ஒருகட்டத்தில் காதலிக்கவும் துவங்கினர். திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், அஜித் பெற்றோர் இதை ஏற்கவில்லை.. பிறகு பெரிய தயாரிப்பாளரிடம் இதுகுறித்து அஜித்தின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். அதற்கு பிறகுதான், அஜித்திடமிருந்து ஒதுங்கி செல்லுமாறு அந்த தயாரிப்பாளர் காட்டமாக ஹீராவிடம் சொல்லவும், ஹீராவும் சினிமாவிலிருந்தே ஒதுங்கிவிட்டார்.
துணிச்சல் நிறைந்த பெண்
ஒரு வடமாநில நபரை திருமணம் செய்ததாக சொன்னார்கள்.. அது ரகசியமாகவே முடிந்துவிட்டது.. இப்போது சிங்கிளாகவே இருக்கிறார்.. அமெரிக்காவில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.. சைக்காலஜி படித்துள்ளதால், அப்போதே நிறைய பள்ளிகளுக்கு சென்று உளவியல் விஷயங்கள் குறித்து பேசினார் ஹீரா..
முதல் படத்தில் கிளாமராக நடிக்கவில்லை.. அதற்கு பிறகு, மார்டன் டிரஸ் அணிந்துதான் பெரும்பாலும் நடித்தார்.. சேலை கட்டி நடித்தது குறைவுதான்.. ரொம்ப துணிச்சல், வெளிப்படையாக பேசிவிடக்கூடிய பெண் ஹீரா" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications