சைக்கிள் கேப்ல சைடு பிசினஸை ஸ்டார்ட் செய்த கயல் நடிகை! டாப் ஹீரோயினாச்சே சைத்ரா.. ஏன் என்னாச்சு?
சென்னை: கயல் சீரியல் மூலம் இளைஞர்களின் மனதில் நிறைந்திருக்கும் சைத்ரா ரெட்டி தற்போது சைடு பிசினஸ்ஸை தொடங்கிவிட்டார் போல! அது குறித்து வீடியோவை போட்டுள்ளார்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வந்தார். அவருக்கு சினிமா வாய்ப்பு வந்ததால் சீரியலில் இருந்து அவர் விலகியதும் அந்த சீரியலுக்கு வந்தவர்தான் சைத்ரா ரெட்டி!

கன்னடத்து பைங்கிளி! தமிழில் நடித்த முதல் சீரியல் இதுதான்! இதன் பிறகு ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாகவும் நடித்து மக்களை கவர்ந்தார். இதையடுத்து அவருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்தார்.
இதன் பிறகுதான் அவருக்கு கயல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது டிஆர்பி ரேட்டிங்கில் சக்கை போடு போடுகிறது. இந்த சீரியலுக்கு சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது. அவர் இடம் பெறும் காட்சிகள் தினமும் இருக்கும்.

மாதத்தில் 20 நாட்கள் என வைத்துக் கொண்டாலே அவருக்கு 4 லட்சம் ரூபாய் கிடைக்கும். செவிலியர் பணி செய்யும் ஒரு சாதாரண குடும்பத்து பெண்- வீட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் உறவாடியே கெடுக்கும் பெரியப்பா குடும்பத்திற்கு மத்தியில் பிரச்சினைகளை உடைத்து எப்படி மேலே எழுகிறார் என்பதுதான் கதை.
அது என்னவோ கயலுக்கு எங்கிருந்துதான் டிசைன் டிசைனாக பிரச்சினை வருமோ தெரியல என சீரியல் பார்ப்போர் கேள்வி எழுப்பும் அளவுக்கு ஒன்று முடிந்தால் அடுத்தது, அது முடிந்தால் இன்னொன்று என ஆரம்பித்து வருகிறது. இப்படி சீரியல் கொடிக் கட்டி பறந்து கொண்டிருக்க, சைத்ராவோ சைடு பிசினஸை தொடங்கிவிட்டார்.

அதுகுறித்த வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் மாட்டுக்கு பால் கறப்பது போன்ற ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என ஆசைப்பட்ட நான் தற்போது மாட்டு பண்ணையே ஆரம்பித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications