மனிதம் செத்துருச்சா? கடவுள் இருக்கான் குமாரு.. மீம்ஸ்களுக்கு குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் பதில்
சென்னை: மீம் கிரியேட்டர்கள் குழந்தை இல்லாதவர்களின் நிலையை யோசித்து பார்க்க வேண்டும் என்றும், தன்னை கேலி செய்வதாக நினைத்து தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் எனவும் குக் வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இதன் இரண்டு சீசன்கள் முடிந்து, தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று விரைவில் நடைபெற உள்ளது.
ஒரு காலத்தில் சமையல் நிகழ்ச்சிகள் என்றாலே அதை பெண்கள் மட்டும் பார்ப்பார்கள் என்ற நிலையை மாற்றி நகைச்சுவையை உள்ளே சொருகி அனைத்து வயதினரும் பார்க்கும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது குக் வித் கோமாளி.

வெங்கடேஷ் பட்
விஜய் டிவியின் பிரபல நகைச்சுவை கலைஞர்கள், நடிகர், நடிகைகள், பாடகர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வந்தனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தாமு விலகியதால் வெங்கடேஷ் பட் மட்டும் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தையா?
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார். குழந்தை பிறப்பதற்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அந்த பெண்ணிடம், குழந்தையுடன் வந்திருந்த மற்றொரு பெண், "குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார். மனஅழுத்தம் குறைந்து, சந்தோஷமாக இருப்பாய். விரைவில் குழந்தை பிறக்கும்." என சொல்லி உள்ளார்.

அணிவகுக்கும் மீம்கள்
vஅதைக் கேட்டு அந்த பெண்ணும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்க துவங்கி உள்ளார். தற்போது அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றார். இதைக் கேட்டு போட்டியாளர்களும் மெய் சிலிர்ப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால் அந்த அளவிற்கு மன அழுத்தம் குறைவதாகவும் கூறினார்கள். இந்த வீடியோவை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர். குக் வித் கோமாளி பார்த்தால் எப்படி குழந்தை பிறக்கும், எனக்கேட்டு பலர் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

வெங்கடேஷ் பட் வேதனை
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வெங்கடேஷ் பட், "கடந்த 2 நாட்களாக நொறுங்கிப்போனேன். என்னை ட்ரோல் செய்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல. மனிதம் செத்துவிட்டதோ என்று எண்ணி வருந்துகிறேன். எதுவேண்டுமானாலும் சாகும், ஆனால் மனிதம் சாகாது. ஆனால், கடவுள் இருக்கான் குமாரு. சந்திரமுகி படம் மாதிரி 2 நாள் ஆட்டம் இருந்தது. நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளார்கள்.

குழந்தை செல்வம்
குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அது எவ்வளவு பெரிய கொடை என்று. குழந்தை இல்லாதவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மீம் கிரியேட்டர்கள் தயவு செய்து என்னை கேலி செய்வதாக நினைத்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்!" எனக் குறிப்பிட்டு உள்ளார். எனக்கு திருமணம் முடித்து 7 ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications