எம்ஜிஆர் பாட்டை பாடி சரிகமப திவினேஷை பாராட்டிய சரத்குமார்.. வெளிப்படையாக சொன்ன “அந்த” வார்த்தை.. சூப்பர்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப நிகழ்ச்சி இணைந்து இந்த வாரத்தில் மகா சங்கமம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் சரிகமப போட்டியாளரான திவினேஷை எம்ஜிஆர் பாட்டு பாடி பாராட்டி இருக்கிறார்.
ஜீ தமிழில் இந்த வாரம் மகா சங்கமம் மூலமாக ஒரே மேடையில் சரிகமப போட்டியாளர்களும், டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் போட்டியாளர்களும் தங்களுடைய திறமையை காட்ட இருக்கிறார்கள். இது குறித்த ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சரிகமப நிகழ்ச்சி மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சியும் இன்று மற்றும் நாளை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

சினேகா செய்த செயல்
இதுபோல இந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் யோகஸ்ரீக்கு அவருடைய நீண்ட நாள் கனவை நடிகை சினேகா நிறைவேற்றி இருக்கிறார். தனக்கு இன்னும் காது குத்தவில்லை என்று சில வாரங்களுக்கு முன்பு யோகஸ்ரீ கூறியிருந்தார். இதனால் அவருடைய சொந்த ஊரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகனத்தில் வந்து சரிகமப சேட்டில் வைத்து காதுகுத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். அப்போது ஒரு சகோதரியாக சினேகா சீர்வரிசை செய்திருக்கிறார். இதை பார்த்த பலர் சினேகாவை பாராட்டி வருகிறார்கள்.
சரத்குமார் டான்ஸ்
அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை வரலட்சுமியின் கணவரும் வந்திருக்கிறார்கள். சரத்குமாருக்கு ஆள் உயர மாலை போட்டு வரவேற்கிறார்கள். பிறகு சரத்குமார் தன்னுடைய எவர் கிரீன் பாடலான சலக்கு சலக்கு பாடலுக்கு சினேகா, மணிமேகலை, தன்னுடைய மருமகன், போட்டியாளர் பஞ்சமி உட்பட பலருடன் டான்ஸ் ஆடுகிறார்.
பஞ்சமி செய்த செயல்
அதுபோல சரத்குமாருக்காக பஞ்சமி தன்னுடைய தோட்டத்தில் விளைவித்த கத்திரிக்காய், முருங்கக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை கொடுத்து ஆசீர்வாதம் வங்கி இருக்கிறார். பிறகு சரத்குமார் பேசும்போது இன்னைக்கு ஜீ தமிழில் மகா சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நாம எல்லாரும் சந்திக்கனும் என்பது இறைவனுடைய முடிவு என்று கூறியிருக்கிறார்.

சரத்குமார் பாடிய பாடல்
அதுபோல சரிகமப நிகழ்ச்சியில் பல பழைய பாடல்களை பாடி பிரபலமான திவினேஷ் "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்" என்ற பாடலை பாட, சரத்குமாரும் அவரோடு சேர்ந்து பாடி இருக்கிறார். பிறகு உனக்கு திவினேஷ் என்று பெயர் வைத்திருக்காங்கல்ல உனக்கு சரியான பெயர் தான் வைத்திருக்கிறார்கள். இவன் பாடிய மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடல் இவனுக்கு தான் சரியாக இருக்கும் என்று சொல்லி "மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்று என்று எம்.ஜி.ஆர் பாடலை திவினேஷை புகழ்ந்து பாடி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications