மகாபலிபுரம் கடற்கரையில் அலைகளுக்கு நடுவே நடனம்.. பெரிய அலையில் சிக்கிய டிடி சகோதரி பிரியதர்ஷினி
சென்னை: டிடியின் அக்கா பிரியதர்ஷினி கடல் அலையில் சிக்கிக் கொண்ட சம்பவம் நடைபெற்றது. அதை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவில் அறிமுகமானார்கள். இவர்கள் இருவரும் ஆங்கரிங்கும் செய்தவர்கள்.
திவ்ய தர்ஷினி டிடி என செல்லமாக அழைக்கப்படுகிறார். அவர் விஜய் டிவியில் சீனியர் ஆங்கராக இருந்து வருகிறார். பிரியதர்ஷினியும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். இவர்கள் இருவருக்குமே ரசிகர்கள் ஜாஸ்தி.
பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு நடனம் என்றால் உயிர். ஷூட்டிங்கிலேயே மற்ற நடிகைகளுடன் நடனம் ஆடி அதை ஷார்ட்ஸ் ஆக இணையத்தில் வெளியிடுவார். இவர் பரதநாட்டியத்தை மதுரை முரளிதரன், மணிமேகலை ஆகியோரிடம் கற்றார்.
நடனங்கள்
மேலும் குச்சிப்புடி, கதகளி என பல விதமான நடனங்களை கற்று தேர்ந்தவர். இந்த நிலையில் பிரியதர்ஷினி மகாபலிபுரம் கடற்கரையில் நடன பயிற்சியை மேற்கொண்டு அதை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாறைகள் மீது அவர் ஆடிக் கொண்டிருந்தார்.
கடல் அலைகள்
அப்போது கடல் அலைகள் வந்தன. எனினும் அதை பொருட்படுத்தாமல் அலையில் நனைந்தபடியே ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் பாறையில் உட்கார்ந்தபடியே ஒரு நடன அசைவை மேற்கொளளும் போது பெரிய அலை வந்தது. அதில் அவர் சிக்கினார். பின்னர் சுதாரித்து எழுந்தார்.
இன்ஸ்டாகிராம்
இதை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். ஷூட்டிங் பரிதாபங்கள் என கமென்ட் போட்டு அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். காலை வேளையில் அலைகள் சப்தத்திற்கு மத்தியில் இவர் ஆடிய நடனம் குறித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஜாக்கிரதை அக்கா என பதிவிட்டிருந்தார்.