கொடி இடை அழகியே.. தர்ஷா குப்தா.. உருகும் ரசிகர்கள்!
சென்னை: சீரியல்கள் சினிமாவைவிட மக்கள் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்தது விடுகிறது.
ஒரு சீரியலை பார்த்துக்கிட்டே இருப்பதால், அந்த சீரியலில் நடிச்சிட்டு வர கதாநாயகிகளும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்கள். சினிமா நடிகைகளுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது.
சிலர் சீரியல்களில் அவ்வளவு ஜொலிக்கவில்லை என்றாலும் இப்ப இருக்கிற இணையத்தள வசதிகளை நன்றாக பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுக்குறாங்க. அந்தவகையில்தான் இப்போ தர்ஷா குப்தாவும் ரசிகர்கள் மனதில் குடி கொண்டுள்ளார்.
மிருகங்களை விடவா கேவலமா ஆகிவிட்டது மனித உயிர்கள்.. கதறி அழுத ஜனனி!
கன்னடத்து இளம் கிளி
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறா.ர் அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
செந்தூரப் பூவே
முள்ளும் மலரும் தொடரைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்று தொடரிலும் தற்போது விஜய் டிவியில் துவங்கியுள்ள செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். செந்தூரப்பூவே யில் நடித்துக் கொண்டிருக்கும் போது புது படத்திற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன்மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.
ஹாட் வீடியோக்கள்
இந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களையும், டிக்டாக்கில் வீடியோகளையும் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அதுதானே ரசிகர்களிடம் பசை போட்டு ஒட்டி வைத்துக் கொள்ளஇப்போது நடிகைகளுக்கு உதவுகிறது. சின்னத்திரையில் இருக்கும் ரசிகர்களை விட இணையதளத்தில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டு போகிறது.
குவியும் ரசிகர்கள்
இவருடைய போட்டோ அப்லோட் பண்ணியதும் இணையத்தில் அது வைரலாகி விடுகிறது. ரசிகர்கள் குவிந்து விடுகிறார்கள். இவரும் தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப ரசிகர்களின் கமெண்டுகளுக்கு ரிப்ளை பண்ணுகிறார். இது ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. ஹோம்லியாக இருக்கும் இவர் சேலையில் படுகவர்ச்சியாக போட்டோஸ் அப்லோடு பண்ணியிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவரைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.
கருப்பு சேலையில் கலக்கல்
ஒரு ரசிகரின் விருப்பத்திற்காக பிளாக் கலர் சாரி கட்டிக்கொண்டு வீடியோ அப்லோட் பண்ணியிருக்கிறார். எப்படியோ ரசிகர்களை குஷிப்படுத்தி அவர்களை கிளுகிளுப்பாகவே வைத்திருக்க முயற்சிக்கிறார் என்றுதெரிகிறது. சேலையில் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு காட்டி ரசிகர்களை கிறங்கடித்து காணாமல் தான் வெள்ளித்திரையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் ஹோம்லியாக மட்டும்தான் நடிப்பேன் அப்படி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறாராம்.
அது சரி!