பி.வாசு - கவுண்டமணி கூட்டணிக்கு இப்படி ஒரு வரலாறா? தனி டிரெண்டையே உருவாக்கி இருக்காங்களே?
சென்னை: 80 மற்றும் 90களில் மிகப்பெரிய காமெடி கூட்டணியாக அறியப்பட்ட கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணியை சப்தமே இல்லாமல் 26 படங்களில் உடைத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு.
கவுண்டமணியை மட்டும் காமெடியனாக வைத்து அதிகமான படங்களை இயக்கியுள்ள பி.வாசு அவரது காமெடி ஜோடியான செந்தில் இல்லாமல் இயக்கியது தான் பெரிய ஹைலைட்டே .

ஒரே ஒரு படத்திற்காக மட்டும் தயாரிப்பாளருக்காக செந்திலை நடிக்க வைப்பதில் காம்பரமைஸ் செய்துள்ளார் பி.வாசு.
குறுகிய நாட்களே படப்பிடிப்பு நடைபெறும் அந்த காலத்தில் கதாநாயகன் தவிர மற்ற அனைவரும் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி இருப்பார்கள்.அப்படி இருந்தாலும் 80, 90களில் படங்களை இயக்க விரும்பும் இயக்குனர்கள் மட்டுமின்றி தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு கதாநாயகனுக்கு அடுத்தபடியாக செந்தில்-கவுண்டமணி கூட்டணியை படத்தில் களம் இறக்குவதை பெரிதும் விரும்பி வந்தனர்.
ஆனால் இயக்குனர் பி. வாசு கொஞ்சம் வித்தியாசமாக கவுண்டமணி மெயின் காமெடி செய்தாலும் செந்திலுக்கு பதிலாக கதாநாயகனே காமெடி செய்தால் நன்றாக இருக்கும் என்று தனித்துவமாக யோசித்து இருக்கிறார்.கதாநாயகன் இணைந்து காமெடி செய்தால் படத்திற்கு மட்டுமல்ல கதாநாயகனுக்கும் நல்லது என்று அப்போதே நினைத்த பி.வாசு தனது படங்களில் கவுண்டமணியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்.
கவுண்டமணி வைத்து அதிக படங்களை இயக்கிய பி.வாசு மன்னன்,சின்னத்தம்பி, நடிகன், ரிக்ஷா மாமா, மலபார் போலீஸ் போன்ற படங்களில் காமெடி சீன்களை பெரிதளவு வெற்றி பெறவும் வைத்திருக்கிறார். அந்தப் படங்களின் காமெடி சீன்களில் வரும் வசனங்கள் இன்றளவும் பலரால் பேசப்பட்டு வருகிறது.தயாரிப்பாளர் மிகவும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்காக விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் மட்டும் செந்திலை கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க வைத்திருக்கிறார்.
இது குறித்து சமீபத்தில் கூறியுள்ள இயக்குனர் பி.வாசு சத்யராஜ் -கவுண்டமணி, ரஜினி- கவுண்டமணி இப்படி ஹீரோக்களுடன் இணைந்தே காமெடியன்கள் காமெடி பண்ண வேண்டும் என்று தான் நினைத்ததாகவும்,தனது படங்களில் காமெடியன்களுக்கு என்று தனி ட்ராக் கிடையாது என்றும்,கவுண்டமணி-செந்தில் காம்போவை தனது படங்களில் வைக்கக் கூடாது என்பதையும் தன்னுடைய படம் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக இதை ஆரம்பத்திலேயே முடிவு செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதற்காக செந்திலை தன்னுடைய படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று நினைக்கவில்லை என்றும் தனக்கு செந்திலையும் அவரது நடிப்பையும் மிகவும் பிடிக்கும் என்றும் கட்டுமரக்காரன் படம் செந்திலை மட்டுமே வைத்து காமெடி காட்சிகளை எடுத்துள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications