ரீசார்ஜ் கடை பொண்ணையும்..ரூமுக்குள்ள..அந்த வீடியோ..அர்ணவ் பற்றி பரபரப்பான ஆதாரத்தை வெளியிட்ட திவ்யா
சென்னை: செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவர் அர்ணவ் பற்றி பல திடுக்கிடும் ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே திவ்யா அர்ணவ் பற்றி குற்றச்சாட்டுகள் வைத்திருந்த நிலையில் அதற்கெல்லாம் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை செய்தி சேனல்களில் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் அர்ணவ் திருநங்கை ஒருவரை சோட்டானிக்கரையில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் பல பெண்களோடு சாட்டிங் செய்து கொண்டிருந்தது பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சீரியல் நடிகர்களான திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்ப பிரச்சனை சில மாதங்களாகவே சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டாலும், இவர்களுடைய திருமண விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் அடுத்தடுத்து பிரச்சனைகளும் வெளியே தெரிய ஆரம்பித்தது.
தொடர்ச்சியாக இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திவ்யா வைத்த குற்றசாட்டுகளால் அர்ணவ் ஜெயிலுக்கு போய் திரும்ப வந்து சீரியல்களில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களாக பொறுமையாக இருந்த திவ்யா இப்போ அர்ணவ் பற்றி பல அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களாகவே அர்ணவ் பற்றி பல குற்றச்சாட்டுகளை திவ்யா செய்தி சேனல்களில் வைத்திருக்கிறார். அதில் திருநங்கையோடு திருமணம், இலங்கை பெண்ணோடு காதல் கர்ப்பம், பிறகு கர்ப்பத்தை கலைத்தது அது மட்டும் அல்லாமல் ஆண் பைலட் ஒருவரோடு நெருங்கி பழகி அவரிடமும் பணம் வாங்கிக் கொண்டு அவரை ஏமாற்றியது என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதற்கான பல ஸ்கிரீன்ஷாட் ஆடியோக்களையும் திவ்யா வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அர்ணவ் ஜெயிலுக்கு போயிட்டு மீண்டும் வெளியே வந்த பிறகு கூட இன்ஸ்டாகிராமில் பழக்கமான பெங்களூர் டாக்டர் பெண் ஒருவரிடமும் நெருக்கமாக பேசி பழகி இருக்கிறார் என்றும், திவ்யா அடுத்த ஆடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் திவ்யா பேசியது எல்லாமே எடிட்டிங் என்னை பற்றி தவறாக வதந்தி பரப்பி கொண்டிருக்கிறார் என்று அர்ணவ் கூறி இருந்தார்.
அதைத்தொடர்ந்து திவ்யா மீண்டும் பிரபல சேனல் ஒன்றில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியிருக்கிறார். அதில் அர்ணவ் காலேஜ் படிக்கும் போது காலேஜ் பக்கத்தில் ஒரு ரீசார்ஜ் செய்த கடையில் வேலை செய்த பெண்ணை பேசி பழகி அந்த பெண்ணிடம் தனக்கு ரீசார்ஜ் செய்ய வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.அதோடு இல்லாமல் ஒரு முறை அந்த பொண்ணை தன்னுடைய ரூமுக்கு கூட்டிட்டு வந்து அந்த பொண்ணோட தப்பா நடந்து இருக்காரு.
அர்ணவ் இரண்டாம் வகுப்புக்கு பிறகு ஃபுல்லாவே ஹாஸ்டலில் இருந்து தான் படிச்சிருக்காரு. அப்போ ஆண்களோடு கூட தப்பா பலமுறை இருந்திருக்காராம். போனில் தப்பான படம் பார்த்துட்டு தான் இருப்பாராம். அது அவரோட கூட படிச்ச நண்பர் தான் எனக்கே சொன்னாங்க. அந்த ரீசார்ஜ் கடையில் வேலை பார்க்கிற பொண்ணையும் தன்னுடைய ரூம்பிற்கு கூட்டிட்டு வந்து இவர் தப்பா இருக்கிறத கூட வீடியோ எல்லாம் எடுத்து வச்சு இருந்தார் என்று அர்ணவ் பிரண்ட் எனக்கு சொல்லி இருக்காரு.
அதுக்கு பிறகு அந்த பொண்ண கழட்டி விட்டுட்டு காலேஜ் படிக்கும் போது இன்னொரு பொண்ண காதலிச்சி இருக்காரு. அந்த பொண்ணும் முஸ்லிம் என்பதால் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்திருக்காரு. ஆனா அர்ணவ் உடைய அப்பா அந்த பொண்ணோட வீட்டிலே போய் மிரட்டிட்டு வந்திருக்காரு. அதுக்கு பிறகு அந்த பொண்ணு என்ன ஆச்சுன்னு தெரியல.
அதுக்கு பிறகு தான் அர்ணவ்வை வீட்டை விட்டு அடித்து விரட்டி சென்னைக்கு அனுப்பி இருக்காங்க. சென்னைக்கு வந்தும் திருந்தாத அர்ணவ், ஒரு திருநங்கை ஒருவரோடு பழக்கம் இரவு ஏற்பட்டிருக்கிறார். அவங்க கிட்டயும் ரொம்ப ஆசை பாசமா பேசி அவரை சோட்டானிக்கரையில் திருமணமும் செஞ்சி இருக்காரு. திருமணத்துக்கு பிறகு சிங்கப்பூரில் அந்த திருநங்கையோடு குடும்பம் நடத்தி இருக்கிறார்.
ரெண்டு வருஷமா அங்கு குடும்ப நடத்திக்கிட்டு இருக்கும்போது இவர் ஒரு முஸ்லிம் என்கிறதுனால அங்க வர முஸ்லிம் ஆட்கள் இடம் ரொம்பவே நெருங்கி பழகி இருக்கிறார். அதோடு தன்னுடைய லேப்டாப்பில் இருந்து பல பெண்களுக்கும் ஆபாசமாக மெசேஜ் செய்திருக்கிறாராம். அதை அந்த திருநங்கை ஒருநாள் அர்ணவ் இல்லாத நேரத்துல பார்த்துருச்சு.
அதனால அர்ணவை அப்படியே அவங்க சொந்தக்காரங்க ஒருத்தரோட ஊருக்கு அனுப்பி வச்சிட்டு. பிறகு அர்ணவ் உடைய பாஸ்போர்ட்டை அந்த திருநங்கை பிடுங்கி வச்சுக்கிட்டாங்க. அந்த திருநங்கை அர்ணவோடு எடுத்த புகைப்படங்களை, அர்ணவ்க்கு பணம் அனுப்புனது, அவர் யாருக்கெல்லாம் சாட் பண்ணாரு என்கிற எல்லா ஸ்க்ரீன்ஷாட்டையும் எனக்கு அனுப்பி வச்சிருக்காங்க என்று திவ்யா கூறி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications