Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வன் பட பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஹாரீஸ் ஜெயராஜ் சேர்த்த அந்த ஒரு வரி ? ஆஹா அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வன் படத்தில் வரும் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உதவியாளராக பணியாற்றிய ஹாரீஸ் ஜெயராஜ் என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்வோம். அவர் சேர்த்த ஒரு வரி எத்தனை பிரபலம் என்பதை மறுக்க முடியாது.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ரஹ்மான் மண்டபத்தில் எழுதிய சுக்வீந்தர்சிங்கின் பாட்டை தர்பாரில் மாற்றி விட்டு ஆயிரம் பொற்காசு பார்த்ததாகவும், ஆஸ்கர் வாங்கியதாகவும் ராம்கோபால் வர்மா சொல்லி இருக்கிறார்.

television a r rahman harris jayaraj

உடனே ரஹ்மான் ஹேட்டர்ஸ் சலங்கை கட்டி ஆடத் தொடங்கிட்டாங்க. முதலில் இசை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நீதிகள் கொண்டு வந்தால் அதில் சினிமா இசையே வராது. அதனால் தான் அது மெல்லிசை. பாகவதர் காலத்தில் ராக, ஆலாபனைகளாக தொடங்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு பத்தாண்டும், சினிமா இசை தன் வடிவை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன.

எம்.எஸ்.வி இசை போரடித்த போது மக்களுக்கு ஹிந்தி இசை பிடித்திருந்தது. அப்போது புகுந்த இளையராஜா இசை தமிழ்மக்களை தனி பரவசத்துக்குள் கொண்டு போனது உண்மை. இளையராவின் காலத்தில் பாடல்கள் ஹம்மிங்கில் தொடங்கும். அன்னக்கிளி படத்தின் 'லலிலலிலலு...லலிலலிலலு...' ஹம்மிங் ஒரு புது பிரவாகத்தை நம் மனதில் ஏற்படுத்தியது உண்மை. மச்சானைப் பாத்தீங்களா பாட்டு பட்டி தொட்டியெங்கும் ஒலித்த போது இந்த ஹம்மிங் தான் அதை புகழடைய வைத்தது.

அதே போல் ஆயிரம் மலர்களேவின் ஹம்மிங்...ஒரு பெண்ணின் ஆனந்தத்தை அழகாக உள்ளிருத்திய ஒன்று. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ரஹ்மான் வந்ததும் முதலில் அழிந்தது இந்த ஹம்மிங்கும், தொகையறாவும் தான். ஹம்மிங்குக்கு பதிலாக அவர் ஜி.வி.பிரகாஷை வைத்து படத்தில் முதல் இரண்டு வரிகளை பாடவைப்பார். குச்சி குச்சி ராக்கம்மா...சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...அல்லது மர்ஹபா போன்ற பாங்கிசையை சேர்ப்பார். தொடக்கத்தில் அவர் பாடல் ஒரே மாதிரி தான் பேட்டர்னைக் கொண்டிருக்கும். அவரது ஹம்மிங் கேட்க வேண்டுமென்றால் ரங்கீலாவின் யாரோ சுன்லோஸரா பாட்டில் கேட்கும் அளவு தான்.

television a r rahman harris jayaraj

அந்த ஹம்மிங் ஒரு இசைக் கருவிக்கு பதிலாக இருக்கும். தனித்துவத்துக்காகவே அவர் சாகுல்ஹமிது, சுபா, உதித் நாராயண் போன்றவர்களை பாடவைத்தார். அவர் பாடல்கள் ரிதங்களை அடித்தளமாகக் கொண்டிருந்தது. பரோட்டா பரோட்டா என ஒரு பாட்டு வண்டிச்சோலை சின்ராசு படத்தில் இருக்கும். அதன் வரிகளுக்கும், டியூனுக்கும் மேட்ச்சே ஆகாது. பாலு ட்யூனுக்கு தகுந்தாற்போல வேகமாகவும், மெதுவாகவும் பாடி மேட்ச் செய்வார்.

தன் பாடல்களை மேம்படுத்த பலரை பயன்படுத்துவதுண்டு. பிரசன்னா, ஹாரிஸ் ஜெயராஜ், கத்ரி கோபால்நாத் என பலரை அழைப்பார். என்னவளே பாட்டின் தொடக்கத்தில் வரும் குழல் இசை அப்படியே ரங்கீலாவின் தன்ஹா பாட்டில் வரும்.

இடையில் வைரமுத்துவை வைத்துக் கொண்டு அவர் ஆசை, அழகு என பாடல் முழுக்க வருவது போல், பஞ்சபூதங்களை மையப்படுத்தி ரிதம் படத்தில் பாடல்கள் அமைத்தது, ஏழு அதிசயங்களை ஒரே பாட்டிற்குள் வருவது போல் ஜீன்ஸ் படத்தில் இசை அமைப்பது, எல்லா வண்ணங்களும் வருவது போல் அலைபாயுதே படத்தில் பாடல் அமைத்தது எல்லாமே இளையராஜா போன்ற முன் இசையமைப்பாளர்களின் இசை நடைமுறைகளிலிருந்து விலகி நிற்கத்தான்.

அதேப்போல பாடல் பல்லவியை விட அனுபல்லவியாக வரும் அல அலே அல அலே போன்றவை ஹிட்டாகும் விதத்தில் பாடல் அமைப்பார். 'எகிறி குதித்தேன்.. வானம் வெடித்த'தை விட அல அலே தான் பாடல் முழுக்க நிரம்பி இருக்கும்.

பூம்பூம் பாட்டில் கணீரென 'காதல் இது தான் இது தான் என்று கேட்குமா' என பெண்ணின் குரல் பாடும் போது ஆணின் குரல் பூம் பூம் என சொதப்பலாக வயதான குரல் போலிருக்கும்.

இப்போது நான் சொன்னது சிலவற்றை மட்டுமே, இன்னும் நிறைய சொல்லலாம். இவை எல்லாமே தவறு எனச் சொல்லவில்லை. இவை எல்லாமே ராஜா என்கிற பேட்டர்ன் இசையிலிருந்து மாறி தமிழிசையை வேறு பேட்டர்னுக்குள் கொண்டு செல்ல ரஹ்மான் செய்த முயற்சிகள். அவை தமிழ் மக்களால் ரசிக்கப்பட்டதும் உண்மை. இவை நிச்சயம் ரஹ்மான் அல்லாத வேறு ஒருவர் செய்ய முடியும் என நான் நிச்சயம் நினைக்கவில்லை.

சமீபத்தில் காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாட்டில் வரும் ஒரு தவிலிசையை இசைத்த தவில் கலைஞரை பேட்டி கண்டிருந்தது ஒரு யூடியூப் சேனல். நல்ல வேளை....என்னால் தான் பாடல் ஹிட்டானது என அவர் சொல்லவில்லை.

television a r rahman harris jayaraj

முதல்வனே பாட்டில் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அதில் வரும் கோரஸுக்கு 'ஹால்ல்லே...லுய்ய்ய்யா' என தன் ஜெபமொழியை சேர்த்ததாக ஒருவர் சொன்னார். நிச்சயம் இது ரஹ்மானுக்கு தெரியாமல் நடந்திருக்காது.

இப்படி பலராலும் மெருகேற்றப்படுவது ரஹ்மான் இசை. ரஹ்மான் இசை முழுக்க முழுக்க அவர் கை விரல்களில் பிறப்பவை. ராஜாவின் இசை ராஜாவின் இதயத்தில் பிறப்பவை. அவ்வளவு தான் வித்தியாசம்.... அந்த வித்தியாசத்தில் தவறாக ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+