அடடா.. அப்படியே திரிஷா மாதிரியே இருக்காங்களே.. அனுமன் சீரியலில் கலகல!
சென்னை: ராமாயணமா, மகாபாரதமா, ஜெய் ஹனுமானா இது போல புராதன கதைகளாகட்டும்... இல்லை...பாபா போன்ற மகான்கள் கதைகளாகட்டும்... டப்பிங் பக்கம் போய் விடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இதை எல்லாம் அதிக செலவு செய்து, தத்ரூபமான காட்சிகளாக எடுக்க நம்ம சின்னத்திரையில யாருமே இல்லை.
எதுக்கு செலவு செய்யணும், இந்தி போன்ற மொழிகளில் இருந்து எடுத்து டப்பிங் செய்துகிட்டா போச்சுன்னு அலட்சியம்.
ஒல்லியா இருக்குமே
அதுல ஒருத்தர் கூட நமக்கு தெரிஞ்ச முகமா இருப்பதில்லை. அவங்க நம்ம மனசிலயும் நிக்கறதில்லை.அப்புறம் எப்படி புராதன சீரியல்கள் ஜெயிக்கும். இதை புரிஞ்சுக்காத நம்ம டிவிகாரங்க, புராதன சீரியல் எடுத்தா வியூவர்ஸ் கம்மி, எதுக்கு நஷ்டப்படணும்னு அறியாமையில் இருக்காங்க.
சீரியல்?
நடிக்கறது யாருன்னே தெரியாம இருக்கும்போது, யாருக்காக நாங்க சீரியல் பார்க்கறதுன்னு புலம்பற மக்களோட மனச புரிஞ்சுகிட்டு நீங்க எப்போதான் சீரியல் எடுப்பீங்க?
மிஸ் பண்றவங்க...
இதை நினைச்சு நல்ல சீரியல்கள் எல்லாம் மிஸ் பண்றவங்களுக்கு ஒரு ஆலோசனை சொல்றார் இளவட்டப் பையன் ஒருத்தர்.அதாவது சன் டிவியில ஒளிபரப்பாகற ஜெய் அனுமான் சீரியல் நல்லாத்தான் இருக்காம். அதுவும் அனுமன் வேஷத்துல வரும் சிறுவன் நல்லா நடிக்கறானாம்.
திரிஷா மாதிரி
அதைவிட முக்கியம், அனுமனின் அம்மாவாக நடிக்கும் அஞ்சனை அச்சு அசல் திரிஷா மாதிரி இருக்காங்களாம். அதுக்காகவே அந்த சீரியலைப் பார்க்கறதா அந்த பையன் சொல்றான். அனுமன் சரித்திரம் அற்புதமானது...பக்தின்னா இதுதான்னு அவர் ராமன் மேல் வைத்திருக்கும் பக்தி மூலமா உணர்த்துவார். இதை தெரிஞ்சுக்கணும்னா அஞ்சனையின் அழகை ரசிக்க கூடத்தான் சீரியல் பார்க்கலாம்.
புராதன கதைகள்...
நம்ம டிவிக்காரங்களும் இந்த விஷயத்தை முன்னெடுக்கணும். இல்லேன்னா அடுத்த தலைமுறைக்கு புராதன கதைகள் தெரியாமலே போயிரும். யாரை எப்படி கெடுக்கலாம், கொடுமைப படுத்தலாம்னுதான் எண்ணம் ஓடும்.