Eeramana Rojave Serial: வண்டி ஒரே மாதிரி ஓடிக்கிட்டே இருக்குமா? .இந்த பெண்கள்...!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வரதட்சணை, சீர்,செனத்தி, சம்பந்தி வீட்டிலேயே யாருக்கும் தெரியாமலே இருபது லட்சம் ரூபாய் கடன் வாங்கியது என்று, சம்பந்தி வீட்டில் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள்.
இதனால், வெற்றிக்கு கல்யாணம் செய்து வைத்த மலர், அவனது தம்பி புகழுக்கு கல்யா ணம் செய்து வச்ச மலரின் தங்கை அகிலா ரெண்டு பேரையும் மாமியார் வாழா வெட்டியா வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.
வெற்றியும், புகழும் அவ்வப்போது தங்களது மனைவிகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் வெற்றி மலரின் வீட்டுக்கே போயி அவளுடன் பேசிவிட்டு வருவதாக மாமியாருக்கு தகவல் கிடைச்சுருது. விடுவாங்களா?
Bigg boss 3 Tamil: மூணு வருஷமா ரிலேஷன்ஷிப்பா... ஐயோடா... லாஸுக்கு ஓகேவாமே!
நடக்கறது ஒண்ணு
கோயிலுக்கு மாமியார், நாத்தனார் போயிருக்கும்போது, மலர், அகிலாவின் அம்மாவும், பாட்டியும் அங்கு இவர்களிடம் மாட்டிக்கறாங்க. ஏண்டி ஈசு நாம என்ன நினைச்சு இவங்க பொண்ணுங்களை வீட்டுக்கு அனுப்பி வச்சோம். ஆனால் இங்கே வேற ஒண்ணுல்ல நடக்குதுன்னு மாமியார் சொல்றாங்க.
சின்னம்மா என்ன?
என்ன சின்னம்மா சொல்றே என்று நாத்தனார் ஆரம்பிக்குது.ஆமாண்டி, தர வேண்டிய பணம், சீர் எல்லாத்தையும் தந்தால்தான் உங்க பொண்ணுங்க நம்ம வீட்டுக்கு வந்து வாழலாம்னு சொன்னோம். ஆனா, இவங்க வேற கணக்கு போட்டு இருக்காங்கடி. கதவைத் திறந்து வச்சுக்கிட்டு வீட்டு மாப்பிள்ளையை வரவேற்று காவல் காக்கிறாங்கடின்னு சொல்றாங்க.
சித்தி நிஜமாவா
நிஜமாவா சித்தி சொல்றே...இதென்ன அசிங்கம். இப்படி எல்லாம் கூடவா நடக்கும். வெட்கம் கெட்ட பிழைப்பு இது..மாப்பிளையை வீட்டுக்கு வரவச்சு காவல் காக்கறதா... அசிங்கமா இருக்கு சின்னம்மா.. அவ்ளோ தூரம் போறவங்க பணத்தை குடுத்துட்டு மாப்பிள்ளையையும் , பெண்ணையும் வாழ வைக்கலாம்லன்னு சொல்ற நாத்தனார்.
நில்லுங்க போறீங்க
மாமியார், நாத்தனார் சம்பந்தியிடம் கண்டதை பேசிவிட்டு கிளம்பு, நில்லுங்க வந்தீங்க, பேசுனீங்க.. நீங்க பாட்டுக்கு போறீங்க. இப்போ நான் சொல்றதையும் கேட்டுட்டு போங்க.எங்க மாப்பிள்ளை எங்க வீட்டுக்கு வந்தா கதவைத் திறந்து வரவேற்கத்தான் செய்வோம்.
ஒரே மாதிரி வண்டி
அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா பேசிகிட்டு இருந்தா, யாரும் தொந்திரவு பண்ணாதீங்க.. அங்கே போகாதீங்கன்னு காவல் காக்கத்தான் செய்வோம். ஏன், எங்க வீட்டு பெண்ணைத் தேடி வர்றது உங்க பிள்ளைதானே.. முடிஞ்சா அவரை இங்கே வராதீங்கன்னு கண்டிச்சு வைன்னு சொல்ல அதிர்ச்சியில்; நிக்கறாங்க மாமியார், நாத்தனார்.
மலரின் பாட்டி வந்து நானும் நாலு வார்த்தை பேசிட்டு வரேன்னு சொல்லி, இங்க பாருடி... நாங்க கடன் வேணும்னு உங்களை கேட்கலை.உங்க வீட்டு ஆளுங்கதான் தாங்களா குடுத்தாங்க இப்போதைக்கு திருப்பி தர முடியாது. பார்த்துக்கலாம் போங்கடீன்னு சொல்றாங்க.
இப்படித்தான் வரதட்சணை கேட்டால் திருப்பி கேட்கணும்!