மாரிமுத்து இதை செய்யாமல் இருந்திருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.. சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி
சென்னை: திரைப்பட இயக்குனரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.
சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட அசெளகரியம் காரணமாக மாரிமுத்து அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்திருந்தார். இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேசியிருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் சின்னத்திரையில் மூலமாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார்.
ஆனால் அதற்குள் அவருடைய வாழ்க்கை முடிந்து போனது பலருக்கு சோகம் தான். நேற்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு சில மணி நேரங்களிலே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரே தைரியமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருடைய உயிர் பிரிந்தது. இது சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை ரசிகர்கள் நடிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இது குறித்து நேற்று காலை முதல் திரை உலகினர் மாரிமுத்துவின் மரண செய்தியை கேட்டு கடும் சோகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர் இறந்ததற்கான காரணத்தை பற்றி அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஆனந்தகுமார் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, நெஞ்சுவலி வந்தபோது மாரிமுத்து அவரே தான் காரை ஓட்டிட்டு வந்தாரு.
கார் ஓட்டிட்டு வந்த அவரால் காரை விட்டு கீழே இறங்கவே முடியவில்லை. அவருக்கு மூச்சு விடவும் கஷ்டமாக இருந்தது. எல்லா ட்ரீட்மெண்டையும் ஆரம்பிச்சோம். இருந்தாலும் அவரை காப்பாற்ற முடியல. வாயில நுரை நுரையா வந்து கொண்டு இருந்துச்சு. அவங்க வீட்டுக்கு சொன்னோம். அவங்க ஏற்றுக் கொண்டாங்க. பின்னர் எங்களுடைய ஆம்புலன்ஸ் தான் அவருடைய உடலை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு தொடர்ந்து பேசியவர் மாரிமுத்து தானே கார் ஓட்டிட்டு வராமல் வேறு யாராவது வைத்து கார் ஓட்டிட்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம். இப்படி நெஞ்சு வலிக்கும் போது ரொம்ப அழுத்தம் கொடுக்கக் கூடாது. இது மாதிரியான டைமில் கார் ஓட்டவோ, நடக்கவோ, வேற ஏதாவது கஷ்டமான வேலைகளையோ பண்ண கூடாது என்று டாக்டர் ஆனந்தகுமார் பேசி இருக்கிறார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications