மது போதையில் வாகனம் ஓட்டவில்லை எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா! போலீஸ் விளக்கம்
சென்னை: எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வரும் மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டிய போது மதுமிதா மது போதையில் இருந்தாரா என்பது பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் மதுமிதா. இவர் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கோயிலில் தன் நண்பரின் புது காருக்கு பூஜை போட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

அப்போது வரும்போது காரை மதுமிதா தான் ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ரவிக்குமார் என்கிற காவலர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த காவலர் ரவிக்குமாரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் நடிகை மதுமிதா வந்த காரை பறிமுதல் செய்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக நடிகை மதுமிதாவிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. கார் ஓட்டி வந்த நடிகை மதுமிதா மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின அதனை நடிகை மதுமிதா மறுத்தார்.
இந்த நிலையில், விசாரணை அதிகாரி திருமுருகன் என்பவர் அளித்த விளக்கத்தில் நடிகை மதுமிதா குடித்துவிட்டு கார் ஓட்டினார் என்கிற தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார். மதுமிதாவிடம் ஓட்டுநர் உரிமமும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நடிகை மதுமிதா குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோர்ட், கேஸ் என்று சீரியல் எபிசோடுகள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கார் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் சின்னத்திரை நடிகை மதுமிதா.
சின்னத்திரை நடிகை மதுமிதா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்படுவாரா அல்லது அபராதம் விதிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications