ஜெயலலிதா எழுதிய கதை ரஜினிகாந்த் வாழ்க்கையில் ரியலாக நடந்ததாமே! 80-களில் நடந்த டிவிஸ்ட் இதுதான்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு கதையை எழுதினார். அது ரஜினிகாந்த்- லதாவின் திருமணத்துடன் ஒத்து போயிருக்கிறது என்பது தெரியுமா? அது போல் நடிகை அம்பிகாவும் பத்திரிகைகளுக்கு கதை எழுதியுள்ளாராமே!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: ஒரு கல்லூரி மாணவி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரை தன் கல்லூரி விழாவுக்காக அழைக்கப் போகிறார். அங்கு அந்த மாணவிக்கும், நடிகருக்கும் அன்பு ஏற்படுகிறது. நாளடைவில் காதலாகி, திருமணம் வரை செல்கிறது.

திருமணத்துக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. இது ஒரு கதையின் தொடக்கம். இந்தக் கதையின் நாயகனான நடிகர் ராஜிவ் மற்றும் கல்லூரி மாணவி உஷாவின் கதை நடிகர் ரஜினி-லதா அவர்களின் உண்மைக்கதை போல இல்லை?.
ஆனால் இதை ரஜினிகாந்த் திருமணம் நடக்கும் முன்பே ஒரு கதையாக எழுதியதும் அப்போது ஒரு நடிகை தான். ஆம்...பின்னாளில் புரட்சித்தலைவியாக மாறிய செல்வி.ஜெயலலிதா தான் அவர்.
ஜெயலலிதா அவர்கள் 'நதியை தேடி வந்த கடல்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் கல்கி பத்திரிக்கை ஆசிரியர் அவரிடம் தங்கள் பத்திரிக்கைக்காக ஒரு கதை எழுத கேட்கிறார். அவரோ தான் பிஸியாக இருப்பதால் முன்பு 'ஈவ்ஸ் வீக்லி' என்கிற பத்திரிக்கைக்காக ஆங்கிலத்தில் எழுதிய நாவலை தமிழாக்கம் செய்து வெளியிட அனுமதி தருகிறார்.
அப்படி 'உறவின் கைதிகள்' என்கிற பெயரில் ஜெயலலிதா எழுதியாக தொடராக வந்தது அந்த கதை. 80களில் நிறைய பத்திரிக்கைகள் சினிமா செலிப்ரிட்டிகளை தொடர் எழுத சொல்லி சர்க்குலேஷனை எகிற வைத்ததெல்லாம் நடந்திருக்கிறது. நடிகை அம்பிகா எழுதிய தொடர்கதையை படித்த ஞாபகம் இருக்கிறது. கமல் 'தாயம்' என்கிற கதையை ஆசிரியர் மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழில் எழுதினார்.
வாணி கமல் அவர்கள் 'அவர்' என்கிற தொடரை கமல் பற்றி குமுதத்தில் எழுதினார். சாவித்திரி கதை தொடராக வந்திருக்கிறது. பாக்யராஜின் 'மௌனகீதங்கள்' பகுதி வரை தொடராக வந்து படம் பார்க்க ஆவலை தூண்டியது நிஜம்.
அது படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அவரே தனது பாக்யா இதழில் எழுதிய கதையை தேவர் பிலிம்ஸ் பிரபு நடிக்க படமாக எடுத்தது. 'பொண்ணு பாக்க போறேன்' என நினைக்கிறேன். பாக்யராஜுக்காக அவரே எழுதிய ரோலை பிரபுவின் தம்பி மனோவுக்கு கண்ணாடி மாட்டி அறிமுகப்படுத்தினார்கள்.
சரி...உறவின் கைதிகளுக்கு வருவோம். செல்வி.ஜெயலலிதா 80ல் எழுதிய உறவின் கைதியில் ட்விஸ்ட் என்னன்னா உஷா என்கிற பெண்ணை நடிகர் ராஜீவ் என்பவர் காதலிக்க திருமணம் வரை செல்கிறார்கள். கடைசியில் மாப்பிள்ளையாக வருபவர் ராஜீவ் என்பவரை பார்த்ததும் உஷாவின் தாயார் கல்யாணி அதிர்ந்து போகிறார். காரணம் ராஜீவ் தான் தாயாரின் முன்னாள் கணவன். பணக்கார வீட்டு பெண்ணான கல்யாணி வீட்டை எதிர்த்து திருமணம் செய்யும் ராஜீவ்வை ஒரு கட்டத்தில் பிரிகிறாள். தன் கர்ப்பத்தையும் அவனிடம் மறைத்து விடுகிறாள். க்ளைமேக்ஸாக ராஜீவ், உஷா தற்கொலை செய்து கொள்ள, கல்யாணி மனநல மருத்துவமனையில் இருப்பதாக கதை முடிகிறது. Twists and Turnsக்காக ரொம்ப சிந்தித்திருக்கிறார்கள் போல 80களில்.... என தெரிவித்துள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications