Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகர் ஹோட்டலில்.. ரூமில் நுழையும்போதே குப்பென துர்நாற்றம்.. ஆடிப்போன திருவனந்தபுரம்.. பாவம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது மலையாள சினிமா உலகை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. என்ன நடந்தது?

எர்ணாகுளத்தை சேர்ந்தவர் திலீப் சங்கர்... பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். 'அம்மா இறைத்தே', 'பஞ்சாக்னி', 'சுந்தரி' போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளது. இதைத்தவிர சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் திலீப் சங்கர் நடித்துள்ளார்.

dileep shankar serial actor

சீரியல்கள்: தற்போது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் "பஞ்சாக்னி" என்ற சீரியலின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.. இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக திலீப் சங்கர் எர்ணாகுளத்தில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்றுள்ளார்... ஆனால், ஷூட்டிங் இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மறுபடியும் எர்ணாகுளம் திரும்பி வராமல், 4 நாள் முன்பு, திருவனந்தபுரம் வான்ராஸ் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.

மீண்டும் ஷூட்டிங்: ரூம் எடுத்த பிறகு, கடந்த 2 நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு அவரை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஹோட்டல் தரப்பில் விசாரித்திருக்கிறார்கள்.. திலீப் சங்கர் இரண்டு நாட்களாக ரூமை விட்டு வெளியே வரவில்லை என்பது அப்போதுதான் தெரியவந்துள்ளது.

அதனால், அவரது அறைக்குள் சென்று ஓட்டல் ஊழியர்கள் பார்த்துள்ளனர்.. கதவை திறந்ததுமே, அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. ரூமுக்குள் நுழைந்ததுமே குப்பென்று துர்நாற்றம் வீசியிருக்கிறது.. எனவே, அவர் இறந்து பல மணி நேரங்கள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். சமீபகாலமாகவே திலீப் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிப்பு: நடிகர் திலீப் சங்கர் மரணம் குறித்து தயாரிப்பாளர் சொல்லும்போது, "கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு ஷூட்டிங் செட்டை பார்வையிட்டார்.. பிறகு ஷூட்டிங் மீண்டும் இணைவதற்காக, ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் சில உடல்நலப் பிரச்சினைகளில் இருந்ததாக, அவரது நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் ஹோட்டலில் தங்கியிருந்த போது, தன்னுடைய ரூமை விட்டு வெளியே வரவில்லை. அவரது மரணத்திற்கான காரணத்தை போலீஸ் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்" என்றார்.

அவர் கடைசியாக நடந்து வரும் பஞ்சாக்னி சீரியலில் சந்திரசேனன் கேரக்டரிலும், சமீபத்தில் அம்மையாரேயில் பீட்டராக நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தார். நடிகரின் மரணம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+