பிரபல நடிகர் ஹோட்டலில்.. ரூமில் நுழையும்போதே குப்பென துர்நாற்றம்.. ஆடிப்போன திருவனந்தபுரம்.. பாவம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது மலையாள சினிமா உலகை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. என்ன நடந்தது?
எர்ணாகுளத்தை சேர்ந்தவர் திலீப் சங்கர்... பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். 'அம்மா இறைத்தே', 'பஞ்சாக்னி', 'சுந்தரி' போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளது. இதைத்தவிர சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் திலீப் சங்கர் நடித்துள்ளார்.

சீரியல்கள்: தற்போது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் "பஞ்சாக்னி" என்ற சீரியலின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.. இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக திலீப் சங்கர் எர்ணாகுளத்தில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்றுள்ளார்... ஆனால், ஷூட்டிங் இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மறுபடியும் எர்ணாகுளம் திரும்பி வராமல், 4 நாள் முன்பு, திருவனந்தபுரம் வான்ராஸ் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.
மீண்டும் ஷூட்டிங்: ரூம் எடுத்த பிறகு, கடந்த 2 நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு அவரை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஹோட்டல் தரப்பில் விசாரித்திருக்கிறார்கள்.. திலீப் சங்கர் இரண்டு நாட்களாக ரூமை விட்டு வெளியே வரவில்லை என்பது அப்போதுதான் தெரியவந்துள்ளது.
அதனால், அவரது அறைக்குள் சென்று ஓட்டல் ஊழியர்கள் பார்த்துள்ளனர்.. கதவை திறந்ததுமே, அவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. ரூமுக்குள் நுழைந்ததுமே குப்பென்று துர்நாற்றம் வீசியிருக்கிறது.. எனவே, அவர் இறந்து பல மணி நேரங்கள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள். சமீபகாலமாகவே திலீப் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிப்பு: நடிகர் திலீப் சங்கர் மரணம் குறித்து தயாரிப்பாளர் சொல்லும்போது, "கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு ஷூட்டிங் செட்டை பார்வையிட்டார்.. பிறகு ஷூட்டிங் மீண்டும் இணைவதற்காக, ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் சில உடல்நலப் பிரச்சினைகளில் இருந்ததாக, அவரது நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் ஹோட்டலில் தங்கியிருந்த போது, தன்னுடைய ரூமை விட்டு வெளியே வரவில்லை. அவரது மரணத்திற்கான காரணத்தை போலீஸ் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்" என்றார்.
அவர் கடைசியாக நடந்து வரும் பஞ்சாக்னி சீரியலில் சந்திரசேனன் கேரக்டரிலும், சமீபத்தில் அம்மையாரேயில் பீட்டராக நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தார். நடிகரின் மரணம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications