தலையில் அடித்துக்கொண்டு அழும் ஐஸ்வர்யா.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா தலையில் அடித்துக்கொண்டு அழும் புரமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா தலையில் அடித்துக்கொண்டு அழும் புரமோ வெளியாகியுள்ளது.
விஜய்டிவியின் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக உள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, பாலாஜி ஆகியோர் நடந்துகொள்ளும் விதம் மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

என்னுடை யுக்தி
இந்நிலையில் கடந்தவாரம் நடைபெற்ற தியாகம் டாஸ்க்கில் சென்றாயனை ஏமாற்றி டாஸ்க் செய்ய வைத்து ஐஸ்வர்யா தப்பித்தார். இதுகுறித்து பிக்பாஸ் கேட்டதற்கு இது தன்னுடைய யுக்தி என்றார் ஐஸ்வர்யா.

தாளித்த கமல்
இந்த குட்டு உடையவே ஹவுஸ்மெட்ஸ்கள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் ஐஸ்வர்யாவை தாளித்தார்.

கமல்போட்ட குறும்படம்
ஐஸ்வர்யா கூறிய பொய்களை வரிசைப்படுத்திய அவர், குறும்படம் போட்டும் முகத்திரையை கிழித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைக்கு நான் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்புவேன் என்ற அவர், ஆனால் முடிவு வேறு மாதிரியாக உள்ளது என கூறி அவர் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.

தலையில் அடித்துக்கொண்டு..
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் ஐஸ்வர்யா தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். இனி இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி கதறுகிறார்.

இன்று தெரியவரும்
அவரை மும்தாஜும் யாஷிகாவும் சமதானப்படுத்துகின்றனர். எதற்காக அவர் கதறுகிறார் என்ன நடந்தது என்பது இன்று இரவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications