Aranmanai Kili Serial: அரண்மனை கிளி கதையை ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே எழுதி இருப்பாய்ங்களோ!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ரேணு பார்ட்டி வைக்கறதும்... செம காமெடியா இருக்குங்க.
அதை விட ஜானு அதை மாற்ற சாமி வந்த மாதிரி ஆடி அவங்களை விரட்டி அடிக்கறதும்.. ரொம்பக் காமெடியா இருக்கு.
அரண்மனை கிளி சீரியல் கதையை ஜாலியா ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கிட்டே எழுதிட்டு போயிடலாம் போலிருக்கே!

மீனாட்சி அம்மா
அரண்மனை கிளி சீரியல் கதை என்று நடிகை பிரகதியை கம்பீரமான மீனாட்சி அம்மா என்று காண்பித்து, ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு போட்டியாக களம் இறக்கினார்கள். கடைசியில் கம்பீரத்துக்கு ஏற்ற ஒரு கதையும் இல்லை.

கதையில் ஜானுதான்
கதையில் ஜானுவை அரண்மனை கிளி என்று காண்பித்து கொண்டு போனார்கள். கதை முழுக்க சப்பு சப்புன்னு இருக்கு. அக்காவும், தங்கையும் மீனாட்சி அம்மா வீட்டுக்குள்ளே மருமகளா போய்ட்டு, இதை மீனாட்சி அம்மா ஏத்துக்காததும். கால் நடக்க முடியாத அர்ஜுனை நடக்க வைக்க ஜானு போராடுவதும்தான் கதை.

சீரியல் முழுக்க
ஒரு குடும்பத்தில் இருக்கும் 7 பேர்.. இந்த 7 பேருக்குள் 3 பேர் சதிகாரர்கள் வேற..இவர்களை சுற்றி மட்டுமே நகரும் உப்பு சப்பற்ற கதை. அக்கா குடும்பத்துக்கு எதிராக நடக்கிறாள். தங்கை குடும்பத்துக்கு ஆதரவாக அக்காவையே எதிர்க்கிறாள். மாசக் கணக்கா இவளை மீனாட்சி அம்மா மருமகளா ஏத்துக்காமயே இருக்காங்க இதுதான்.. இது மட்டும்தான் கதை.

கதைக்கு மெனக்கெடல்
கதைக்கு சுத்தமா ஆசிரியர் மெனக்கெடவே இல்லைங்க. இதில் ஆர்ட்டிஸ்ட் ரொம்ப டெடிகேஷனா நடிச்சு இருக்காங்க. நடிகை பிரகதி இளமையோடு அழகாக இருக்கிறார்.அவரை நல்லா பயன்படுத்திக்காம இப்படி வேஸ்ட் பண்றாங்களே..
ஆர்ட்டிஸ்ட் வேல்யூ தெரியலை... என்னத்தை சொல்ல?












Click it and Unblock the Notifications