மாதம்பட்டி ரங்கராஜ் போட்ட போஸ்ட்.. என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்! ஜாய் அனுப்பிய நோட்டீஸ்! புது பிரச்சனை
சென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோருக்கு இடையேயான இரண்டாம் திருமணச் சர்ச்சை நாளுக்கு நாள் சட்டப் போராட்டமாக வலுத்து வருகிறது. ரங்கராஜ் நீதிமன்றத்தை மட்டுமே நம்பி அறிக்கை வெளியிட்ட நிலையில், இப்போது ஜாய் கிரிஸில்டா தரப்பில் இருந்து ரங்கராஜுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, சர்ச்சையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

சர்ச்சையின் பின்னணி
சமூகத்தில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், முதல் மனைவி இருக்கும்போது விவாகரத்து கூடப் பெறாமல் தன்னைத் திருமணம் செய்துகொண்டு இப்போது ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜாய் கிரிஸில்டா ஏற்கெனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றில் ரங்கராஜ் மீது திருமண மோசடிப் புகார்களை அளித்துள்ளார். குறிப்பாக, தன்னைப் போல 10 பெண்களை அவர் ஏமாற்றி இருப்பதாகக் கூறி, மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ரங்கராஜின் அறிக்கை
இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில், ரங்கராஜ் ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டு, "தனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது என்றும், உண்மை சட்டப்படியே நிலைநாட்டப்படும்" என்றும் கூறியிருந்தார். மேலும், "ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது போல நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண ஒருபோதும் விரும்பவில்லை" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிஸில்டாவின் பதிலடி
ரங்கராஜ் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களில், ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளத்தில், "சட்டத்திற்கு முன் நீங்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது Husband @MadhampattyRR" என்று ஒரு வரியில் பதிலடி கொடுத்திருந்தார்.
லீகல் நோட்டீஸ்
மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு இல்லை" என்று உறுதியாகக் கூறியிருந்த நிலையில், இப்போது ஜாய் கிரிஸில்டா தரப்பில் இருந்து அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோட்டீஸின் நோக்கம்
ஜாய் கிரிஸில்டா சார்பில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸின் முக்கிய நோக்கம், பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் பேசியிருக்கும் நிலையில், ஜாய் தரப்பில் அந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்பி பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று ஜாய் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications