மூக்கை சிந்தாத காஜல் பசுபதி.. இப்படி ஆகிப் போச்சே.. உச்சு கொட்டும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை காஜல் பசுபதியின் திருமணம் கடைசி நேரத்தில் நின்று போனது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வந்த காஜலின் இரண்டாவது திருமணம் கடைசி நேரத்தில் நின்று விட்டது.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. நின்றது ஏன் என அதற்கான காரணத்தையும் முதல்முறையாக போட்டோவுடன் வெளியிட்டிருக்கிறார் காஜல்.

சர்ச்சைகள்
பொதுவாக செலப்பிரட்டிஸ் பலரையும் பற்றி கிசுகிசுக்களும் வதந்திகளும் அடிக்கடி பரவி வரும் ஆனால் அதில் எந்த உண்மையும் இருக்காது .சிலர் சொல்லுவார்கள் நெருப்பில்லாமல் புகை வராது என்று ஆனால் அப்படி ஒன்றும் நடக்காமல் தன்னைப்பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காஜல் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

செம நக்கல்
அதுவும் நக்கலாக இவர் போட்ட போஸ்டை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். காஜல் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு இவர் சன் மியூசிக் சேனலில் வீடியோ ஜாக்கியாக டிவி சேனலில் காலடி எடுத்து வைத்து அதற்குப் பிறகு சிந்து பாத் சீரியலின் மூலமாக சீரியல் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து இவர் கஸ்தூரி ,அரசி ,மானாட மயிலாட ,பிக் பாஸ் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் .

முதல் காதல்
மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவருடன் ஜோடியாக ஆட்டம் போட்ட சாண்டியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்கள் காதலிக்கும் போது நண்பர்களாக இருந்து பிறகு காதலர்களாக மாறி இருந்தாலும் திருமணம் முடிந்த பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .அதற்குப் பிறகு இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இருவரும் தங்களுடைய பாதையில் தனித்தனியே பயணித்தனர்.

ஹேப்பி சாண்டி
சாண்டி இரண்டாவதாக திருமணம் செய்து தற்போது அவருக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவருடைய மனைவி இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார் .சாண்டியின் வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் காஜலும் தற்போது சாண்டியின் மனைவியுடனும் சாண்டியின் மகளுடனும் ஒரு பேமிலி பிரண்ட் ஆக மாறிவிட்டார். திடீரென்று சமூக வலைத்தளங்களில் இவருக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் மாப்பிள்ளையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் என பல வதந்திகள் பரவி வந்த வண்ணமாக இருந்தது.

இது எப்படா
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நக்கலாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.அதில் இவரைப்பற்றி சாண்டியின் முன்னால் மனைவிக்கு இரண்டாவது திருமணம் என கமெண்ட் போட்டு இருந்தவர்களுக்கு எனக்கே தெரியாம அது எப்ப நடந்துச்சு என நேற்று போஸ்ட் போட்டிருந்தார். ஆனால் இன்று இன்ஸ்டாகிராமில் அந்த திருமணம் கடைசி நேரத்தில் நின்றுவிட்டது .

சங்கி என்பதால் ஸ்டாப்
இந்தக் கல்யாணம் நின்று போக காரணம் அரசியல் கட்சிதான் என ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு கூறியிருக்கிறார் .இதனை பார்த்து இது உண்மையா பொய்யா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். எப்படி இருப்பினும் காஜலுக்கு நல்லகாலம் பொறந்துச்சே என்று அவரது தீவிர ரசிகர்கள் சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது அதுவும் இல்லை என்றாகி விட்டதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications