Kalyana Veedu Serial: கல்யாண வீடு..செம கலக்கல் மேட்டர் நடக்குதுங்க!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் இரு வீட்டார் சம்மதத்த்துடன் ஒரு கல்யாணம் செய்வது என்பது மிடில் கிளாஸ் குடும்பத்தில் எத்தனை கஷ்டம் என்பதை சொல்லி இருக்கார் இயக்குநர்.
அதோடு, அவ்வப்போது சில சமூக பிரச்சனைகளையும் அப்பட்டமாக காண்பித்து, அவைகளுக்கும் தன்னால் இயன்ற தீர்வுகளை சொல்லி இருப்பதும் பாராட்டுதலுக்கு உரியதாகத்தான் இருக்கிறது.
இப்போது நடந்து முடிந்து இருக்கும் கோபியின் தங்கை சவீதா கல்யாணத்திலும், பல கல்யாண விஷயங்கள் தொடங்கப்பட்டு இருப்பதும் நடைமுறையில் இருக்கும் வழக்கம்தான்.
Arundhathi Serial:அருந்ததி சண்முகத்துக்கு சிவப்பு பல்ப்.. தெய்வானைக்கு மஞ்சள் பல்பபுங்க!
அண்ணன் ஸ்வேதா
கோபியின் நண்பன், அவனின் தங்கை, கோபி மூன்று பேரும்தான் டெல்லியில் மியூசிக் ட்ரூப்ஸ் நடத்திக்கிட்டு இருந்தவங்க. சவீதாவின் கணவன் ஸ்வேதாவின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே அவளை விட்டுட்டு ஓடிப் போனவன். அதனால், ஸ்வேதாவுக்கு தனது நண்பன் கோபியை கல்யாணம் செய்து வைக்கலாம் என்றும், ஸ்வேதாவுக்கும் அந்த ஆசை இருப்பதையும் தெரிந்து அதன்படி காய் நகரத்தி வந்தவன் அவன்.
கோபி சூர்யா
சூர்யாவும் கோபியும் காதலித்தவர்கள், இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது சூர்யாவின் தங்கை ரோஜாவின் ஆசை.ஆனால், ஸ்வேதாவின் தங்கை ஒருத்தி ஒரு பெண் குழந்தையுடன் விட்டுவிட்டு, வேறு ஒருத்தியுடன் வாழ சென்றுவிடுகிறான். கோபியின் நண்பன் தன் கோபியின் தங்கைக்கு வாழ்க்கை கொடுக்கிறேன், பதிலுக்கு கோபி நீ என்தங்கைக்கு வாழ்க்கை குடுன்னு கேட்க இதுவும் இப்போது ஓடிக்கிட்டு இருக்குது.
ராஜா ரோஜா
அக்கா சூர்யாவை பெண் பார்க்க வந்த ராஜா தன் அலுவலகத்தில் காதலித்தவன் என்று, ரோஜாவுக்கு அக்காவுக்கு ராஜாவை விட்டுத் தர விருப்பம் இல்லாமல் பல விஷயங்கள் நடந்துவிட, அதாவது ரோஜாவை நாலு பேர் சீரழித்த பின்னரும், இப்போது ராஜா ரோஜாவை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கிறான். அனால், இப்போது ரோஜா நான் பரிசுத்தமாக இல்லை என்று மறுக்கிறாள்.
மகள் அனுசுயா
மகள் அனுசூயாவை வளர்த்து பெரிய ஆளாக்குவது மட்டும்தான் எனக்கு இப்போதைக்கு குறிக்கோள். அதனால், உனக்கு ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்க விருப்பம் இருந்தால் பண்ணிக்கோ, இல்லை சூர்யாவை பண்ணிக்க விருப்பம் இருந்தால் பண்ணிக்கோ.அதுக்காக எனக்காக தியாகம் பன்றேன்னு சொல்றதில் எனுக்கு உடன்பாடு இல்லைன்னு சொல்றா கோபியின் தங்கை அனுசுயா.
இப்படி ஒரு கல்யாணம் முடிந்த நிலையில் மூன்று கல்யாண பேச்சுக்கள் ஆரம்பமாகி இருக்கிறது.