Kalyana Veedu Serial: எப்போதும் இதுதான் கதையா கோபி கிருஷ்ணன்?
சென்னை: சன் டிவியில் 7:30 மணி நேரத்தை மெட்டி ஒலி காலத்தில் இருந்து இப்போது ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியல் வரை ஒதுக்கித் தந்துள்ளது. இதை சரியாகவும் பயன்படுத்தி வருகிறார் திருமுருகன்.
ஆனால் காலம் காலமாக இரண்டு மூன்று பெண்கள் தன்னை விரும்புவது போல காண்பித்து கொள்வது...என்னதான் வயதானாலும் கோபி கிருஷ்ணன் என்ற வேடத்தில் கல்யாணமாகாத பையனாகவே நடிப்பது என்று திருமுருகனை பார்ப்பது போரடிக்குது.
அதிலும் கல்யாண வீடு சீரியலில் விக் வேற வச்சுக்கிட்டு தொப்பையை வளர்த்துக்கிட்டு, இன்னும் தன்னை இரண்டு பெண்கள் விரும்புவது...அத்துடன் பள்ளியில் படிக்கும் இரண்டும் கெட்டான் வயது பெண் தன்னை பார்த்து வழிவது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் வடிவமைச்சு நடிச்சுக்கிட்டு வர்றார்.

ஸ்வேதா சூர்யா
திருவையாறு கிராமத்துக்கு வந்து சூர்யாவை காதலிக்கையில், அந்த காதலுக்கு தடை வருகிறது. வெளிநாட்டுக்கு போகலாம் என்று போனால், அங்கு டெல்லியில் தன்னுடன் மியூசிக் ட்ரூப்பில் பாடிய ஸ்வேதா தன்னை காதலிப்பது தெரிந்து அவரை கல்யாணம் செய்து கொள்வதாய் வாக்கு கொடுக்கிறார்.

மீண்டும் திருவையாறு
மீண்டும் திருவையாறு திரும்புகையில் சூர்யா தன்னையே நினைத்துக் கொண்டு இருப்பதை அறிந்து, மறுபடியும் இரண்டு பெண்களோடு காதல் பயணம். கோபி எனக்கா உனக்கா என்று போட்டி., கோபி செய்வதறியாது தவிப்பது இப்படியே போகிறது கதை.

சுவேதாவின் புருஷன்
கடைசியில் ஸ்வேதாவை கல்யாணம் செய்வதுன்னு ஒரு முடிவுக்கு வந்து ஆசை ஆசையாய் நான் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக்கணும். அதே புடவையில் கோயிலில் போயி சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்துக்கலாம் என்கிற தனது ஆசையை ஸ்வேதாவிடம் சொல்கிறார். புடவையை எடுத்து வருவதற்குள் ஸ்வேதாவின் புருஷன் திரும்பி வந்து புதுக் கதையை சொல்ல, புருஷனோடு வாழ்வது என்கிற முடிவுக்கு ஸ்வேதா வந்துவிடுகிறார்.

மாற்றி தேற்றி
அதே மனதை உடனடியாக மாற்றி தேற்றி தன்னையே இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கும் சூர்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறாராம். .சூர்யாவும் கோபிக்கு ஸ்வேதா இல்லை என்றவுடன் மீண்டும் மனதில் பூட்டி வைத்த காதலை வெளியில் கொண்டு வந்து தவிக்கிறார்.
என்னங்க கதை இது.. இத்துடன் தங்கச்சி சென்டிமென்டை நுழைத்து விட்டால் மட்டும் தவறு சரியாகி விடுமா? முதலில் உங்களை சுற்றியே கதை பின்னுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று தோணுது திருமுருகன்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications