Kalyana veedu serial: ரோஜா களத்துல இறங்கிட்டா.. கல்யாணம் நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாண வீடு சீரியலில் கோபிக்கு ஸ்வேதாவா, சூர்யாவா என்கிற எதிர்பார்ப்பு, குழப்பத்திலேயே கதை ஒளிபரப்பாகி வருகிறது. இதை விட கோபியின் தங்கை கல்யாணம் இன்னும் இன்னும் என்று இழுத்துக்கொண்டே போகிறது.

கோபி மனசில் சூரியாவும் சூர்யா மனசில் கோபியும் இருக்க, இதை தெளிவாக புரிந்துக் கொண்டவள் ரோஜா மட்டும்தான்.ரோஜா மீண்டும் வீட்டுக்கு வந்து சேர கோபிதான் உதவி செய்திருக்கான் என்று தெரிந்ததும்தான் சூர்யாவின் அப்பாவுக்கு உண்மையே புரிகிறது.

இந்த கண்ணாமூச்சி விளையாட்டு, இதில் கோபி வலிய சென்று ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னது எல்லாத்துக்கும் காரணம், ஸ்வேதாவின் அண்ணன் புருஷோத்தமன் என்று புரிய வைப்பதற்குள் ரோஜாவுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது.

அம்மா ரோஜா

அம்மா ரோஜா

கோபியின் அம்மா, அப்பத்தாவிடம் சென்று ரோஜா நிற்க, அவங்க பயந்துடறாங்க. பயப்படாதீங்க.... நான் பழைய ரோஜாவா வரலை. புது ரோஜாவா வந்திருக்கேன்.அதனால் விவகாரம் எல்லாம் இல்லை, விஷயம்தான் இருக்குது. முதல் நாள் ராத்திரி வரைக்கும் சூர்யாவுக்குத்தான் கோபின்னு உறுதியான முடிவில் இருந்த ஸ்வேதா, ராத்திரி நேரத்துல எதுக்காக விஷம் குடிக்கணும்.

கோபி தன்னை

கோபி தன்னை

அதுவும் கோபியை கல்யாணம் செய்துக்கணும்னுதான் ஸ்வேதா விஷம் குடிச்சாங்கன்னு ஸ்வேதாவே சொன்னாங்களான்னு ரோஜா கேட்க, இல்லை புருஷோத்தமன்தான் சொன்னான். இதுக்காகத்தான் தங்கக்ச்சி விஷம் குடிச்சுட்டா. அவளை கல்யாணம் செய்துக்கறேன்னு ஒரு வார்த்தை சொல்லுன்னு அவன்தான் சொன்னான்.அதனாலதான், கோபியே போயி, உன்னை நான் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னான்.எங்களுக்கு சம்மதம் இல்லைதான், ஆனால் சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சுன்னு சொல்றாங்க.

புரியுதா இப்போ?

புரியுதா இப்போ?

அன்னிக்கு சூர்யா ஸ்வேதாகிட்ட சூர்யா பேசப் போனாளே,அங்கே வலிய வந்து சண்டை போட்டு, விஷயத்தை பெரிசாக்கி, என் அப்பாவையும், அக்காவையும் வெளியில அனுப்பி வச்சது யாரு.. நந்தகுமார்தானே.. எங்க அப்பாவை குழப்பி, அவரை விலக்கி விட்டுட்டா இந்த கல்யாணத்தை தன் தங்கச்சியுடன் நடத்திடலாம்னு நல்ல திட்டம் போட்டு ஏமாத்தி,இப்போ காரியத்தை சாதிச்சுக்கிட்டான் இந்த நந்தகுமார்.

காதல் துளிர்

காதல் துளிர்

கோபிக்கும், சூர்யாவுக்கும் ஒருவர் மனதில் ஒருவர் காதல் துளிர் விட்டுக் கொண்டு இருக்கும்போது அதை கிள்ளி எறிஞ்சுட்டு, அந்த இடத்தில் தன் தங்கை ஸ்வேதாவை உட்கார வைக்க நந்தகுமார் என்னென்ன சதி வேலை செய்து இருக்கார் பாருங்க.இதுல பலியானது என் அக்காவின் காதல்தான்னு கண் கலங்கி பேசறா ரோஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+