பாவனியிடம் நெத்தியடியாக கேள்வி கேட்ட கமல்..மிரண்டுபோன பாவனி
சென்னை: ஒரு வாரமாக குழம்பி இருந்த பஞ்சாயத்தை கமல் இன்று தொடங்கி விட்டார்.
இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் ஆரவாரமிட்டு வருகின்றனர்.
ஒரு வழியா பஞ்சாயத்து முடிந்தால் சரி என்று நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டு வருகிறார்கள்.

விடை கிடைக்குமா
இதை...இதைத்தான் இத்தனை நாளா எதிர்பார்த்தோம் என்று தற்போது லேட்டஸ்ட் ப்ரமோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். தான் செய்தது தவறா??இல்லையா?? என்று தெரியாமலே விளையாட்டை விளையாட்டுத்தனமாக செய்து இப்ப வரைக்கும் புலம்பிக் கொண்டிருக்கும் பாவனிக்கும், சுருதியும் தக்க பாடம் புகட்டுவாரா கமல் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

பஞ்சாயத்து தொடங்கியது
ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருவழியாக நிறைவேறினால் சரி என்று தற்போது போட்டியாளர்களும் அதைத்தான் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே இந்த பஞ்சாயத்து பெரியதாக இருக்கும் போது, நாளுக்கு நாள் இது பெருகிக் கொண்டே போகிறது. அதனால் அதற்கு ஒரு முடிவு கட்டினால் தான் நன்றாக இருக்கும் என்று ஒரு சிலர் அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போது இதே தவறு இன்னமும் நடந்து விடக்கூடாது அதனால் தண்டனை பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று பலர் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் மனநிலை
பேச்சுக்குப் பேச்சு எதிர்த்து பேசிக்கொண்டு போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்ததை பார்த்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களும், ஒரு பக்கம் நெட்டிசன்களும் கருத்துக்களை மாறி மாறி பொழிந்து வந்தனர். இந்த நிலையில் இந்த காயின் டாஸ்க்கில் பாவனி செய்தது சரி என்று ஒரு சிலரும் இது தவறு என்று ஒரு சிலரும் கூறி வந்தனர். ஏற்கனவே பாவனியின் ரசிகர்கள் என்ன இவர் இப்படி மாறி விட்டார் என்று பீல் பண்ணி வந்த நிலையில் இதற்கு முடிவு தான் நல்லது என்று வெயிட் பண்ணி வந்தனர்.

கமலின் கருத்தான கேள்வி
சனிக்கிழமை வந்தாலே போட்டியாளர்களுக்கு ஒரு பதட்டமும், பயமும் பற்றிக்கொள்ளும். காரணம் யாருடைய தலை உருளப் போகிறதோ என்று தான். தற்போது அதில் பாவனி மாட்டியிருக்கிறார். தான் செய்தது செய்யவில்லை என்று இவர் மாற்றி மாற்றி கூறியதற்கு இன்றைக்கு குறும்படம் போட்டு கமல் பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே தற்போதைய ப்ரமோவில் நெற்றியடி கேள்விகளால் பாவனியை மடக்கி கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications