காந்தாராக்கு கெத்து காட்டிய கருப்பு.. தியேட்டரில் நடந்த சம்பவம்.. சந்தோஷத்தில் சூர்யா ரசிகர்கள்
சென்னை: பெரிய எதிர்பார்ப்புக்கு பிறகு கருப்பு படம் இன்று தியேட்டரில் வெளியானதும் சோசியல் மீடியா முழுக்க இந்த படத்தை பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இது சாதாரண வெற்றி அல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த ஒரு மிகப்பெரிய கம்பேக் என்பதால், ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடும் விதமே வேற லெவலில் இருக்கிறது.
சில வருடங்களாகவே சூர்யா படம் என்றால் எதிர்பார்ப்பு இருந்தாலும், முடிவில் சுமாரான அனுபவமாக முடிகிறது என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் "கருப்பு" அந்த பேச்சுக்களை முழுமையாக உடைத்தெறிந்துவிட்டது. இப்போது ரசிகர்கள் "கருப்பா நீ கூட நின்னு ஜெயிச்சுட்ட" என்று எமோஷனலாக கொண்டாடி வருகிறார்கள்.

தியேட்டரில் நடந்த சம்பவம்
இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பேசப்படுவது அதன் பின்னணி இசை மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம். எல்லைச்சாமி கருப்பனாக அவர் திரையில் வரும் ஒவ்வொரு தருணமும் ஒரு சாதாரண காட்சியாக இல்லாமல், ஒரு தெய்வீக அனுபவமாக மாறுகிறது. குறிப்பாக அந்த காட்சிகளில் வரும் இசையும், அவரின் நடிப்பும் சேர்ந்து ரசிகர்களை முழுமையாக ஈர்த்துவிடுகிறது.
சாமி வந்து ஆடிய ரசிகர்கள்
அதனால் தான் பல திரையரங்குகளில் ரசிகர்கள் கைத்தட்டல், விசில் மட்டுமல்லாமல், சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டு தெய்வ அருள் வந்தது போல ஆடும் காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது. இது ஒரு சாதாரண சினிமா ரியாக்ஷன் அல்ல, அந்த காட்சிகள் ரசிகர்களின் மனநிலையை எவ்வளவு ஆழமாக தாக்கியுள்ளது என்பதற்கான சான்று.
காந்தாரா படத்துடன் ஒப்பீடு
இதுதான் தற்போது "காந்தாரா" படத்துடன் ஒப்பிடப்படுவதற்கான முக்கிய காரணமாக மாறியுள்ளது. ரிஷப் ஷெட்டியின் "காந்தாரா" படம் வெளியானபோது கர்நாடகாவில் ரசிகர்கள் தியேட்டருக்குள்ளேயே ஆவேசத்துடன் ஆடிய காட்சிகள் பெரும் பேசுபொருளாக மாறியது. அதே மாதிரியான அனுபவம் இப்போது "கருப்பு" படத்திலும் நிகழ்ந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இரண்டு படங்களையும் இணைக்கும் பொதுவான அம்சம் என்னவென்றால், அது வெறும் கதைகள் அல்ல. அந்தப் பகுதிகளின் நம்பிக்கைகள், கலாச்சாரம், தெய்வ உணர்வு ஆகியவற்றை திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கின்றன. அதனால் தான் அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு திரையரங்கு அனுபவத்தை தாண்டி, ஒரு ஆன்மிக அனுபவமாக மாறுகிறது.

கருப்பு பட வெற்றி
தமிழ் சினிமாவில் இப்படியான ஆன்மிக மாஸ் கலவையுடன் ரசிகர்களை முழுமையாக ஈர்த்த படம் நீண்ட நாட்களாக இல்லை என்ற குறையை "கருப்பு" நீக்கியுள்ளது. "தமிழுக்கும் ஒரு காந்தாரா கிடைத்துவிட்டது" என்ற கருத்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
மொத்தத்தில், "கருப்பு" என்பது சூர்யாவின் கம்பேக் படம் மட்டும் அல்ல. அது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு மாஸ் அனுபவம். "காந்தாரா" போலவே, இந்த படமும் திரையரங்கில் பார்த்தால் தான் அதன் முழு தாக்கம் புரியும் என்ற நிலைக்கு சென்றுவிட்டது.














Click it and Unblock the Notifications