“கயல்” சீரியல் நடிகை சைத்ராவிற்கு நள்ளிரவில் நடந்த சோகம்.. புகைப்படங்களை வெளியிட்டு உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு மெட்ரோ பணியில் அலட்சியத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.
பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி காரில் சென்றபோதும் போரூர் மேம்பாலத்தில் அடி பகுதியில் டிடி சோதனை நடக்கும் இடத்தில் தன்னுடைய கார் நிற்கும் போது மேலே மெட்ரோ கட்டுமான பணியின் போது போடப்பட்ட சிமெண்ட் கலவை தன்னுடைய காரின் மேல் பகுதியில் விழுந்ததால் கார் சேதமடைந்து இருக்கிறது. இதே இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களோ அல்லது நடந்து போகிறவர்களோ வந்தால் அவர்களுடைய நிலைமை என்ன ஆகி இருக்கும் என்று சைத்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அந்த வகையில் ஒரு சிலருடைய அஜாக்கிரதையால் பல உயிர்களை தினமும் இழந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் சிலர் இன்னும் கவன குறைவாகவே இருந்து வருகிறார்கள். அந்த மாதிரி தான் நேற்று சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அது குறித்து சைத்ரா ரெட்டி புகைப்படங்களோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெரிய பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது, நேற்றிரவு, எனக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் கிடைத்தது, அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நள்ளிரவு 1 மணியளவில், நான் எனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தேன் - போரூர் மேம்பாலத்தில். அப்பகுதியில் டிடி சோதனை நடப்பதால் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மெதுவாக சென்றன.
நான் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மேலே மெட்ரோ கட்டுமானப் பணியின் போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை என் காரின் மீது விழுந்தது. இதன் தாக்கம் அதிர்ச்சியளிப்பதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, நான் காயமடையவில்லை, ஆனால் சிமெண்ட் கலவை எனது காரில் ஒட்டிக்கொண்டது மற்றும் நான் அதைப் பற்றி எதுவும் செய்ய முன் கடினமாகிவிட்டது.

எனது கார் இப்போது சேதமடைந்துள்ளது, மேலும் எனது சொந்த தவறு காரணமாக நான் விலையுயர்ந்த பழுதுபார்ப்பை எதிர்கொள்கிறேன். இச்சம்பவம் தீவிர கவலைகளை எழுப்புகிறது: பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமை: நடந்து கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகள் அல்லது சாத்தியமான அபாயங்கள் குறித்து ஓட்டுனர்களை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது தடைகள் எதுவும் இல்லை.
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் பாதசாரிகளுக்கும் ஆபத்து: எனது இடத்தில் இரு சக்கர வாகனம் அல்லது பாதசாரிகள் இருந்திருந்தால், இது பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்கு மெட்ரோ பணி ஒப்பந்ததாரர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், நடந்து வரும் கட்டுமானப் பணிகளைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது பொதுமக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம், அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது.

விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் இந்த பதிவை பகிரவும். எங்கள் சாலையில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு மற்றும் பாதுகாப்பைக் கோருவோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.. என்று சைத்ரா தெரிவித்திருக்கும் நிலையில் சைத்ராவின் இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதில் பலரும் இது பெரிய தவறு நீங்கள் சொல்கிற மாதிரி பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதை நாம் எளிமையாக கடந்து விட முடியாது. இன்று உங்களுடைய காரில் பெரிய அளவில் செலவு வந்திருக்கிறது...
அதே நேரத்தில் உங்கள் கார் நின்ற இடத்தில் நடந்து செல்லும் நபர் நின்றிருந்தால் அவர் மேலே இந்த கலவை விழுந்திருக்குமே! அல்லது இருசக்கர வாகனத்தில் போகிறவர்களின் மேலே இந்த கலவை விழுந்திருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இதனால் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications