சம்பாதிச்சு என்னத்த பண்ண போற? உடனே 1000 பேருக்கு உதவிய மதுரை முத்து.. அசந்து நின்ற திருப்பரங்குன்றம்
மதுரை: விஜய் டிவியின் பிரபலம் மதுரை முத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருகில் உள்ள ஏழை எளியவர்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. இந்த வருடம் எல்லோருக்கும் சந்தோஷமாக அமையவில்லை என்றாலும், அமைய வைப்போம் என்று மதுரை முத்து கூறினார்.
மதுரையைச் சேர்ந்த, விஜய் டிவியின் பிரபலம் மதுரை முத்துவின் வீடு, திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளத்தில் உள்ளது.. டி. அரசபட்டி என்ற ஊரில் பிறந்தவர் முத்து, தன்னுடைய பெயருடன் சொந்த ஊரின் பெயரையும் இணைத்து கொண்டு, மதுரை முத்து என தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்

மதுரை முத்து: டிவி நிகழ்ச்சிகள் தவிர, வெளிநாடுகளிலும் ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து, அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபலமாக இன்று விளங்குகிறார்.
மதுரை முத்து, மறைந்த மனைவி லோகா மற்றும் தன்னுடைய தாய் - தந்தைக்கு சொந்த ஊரான மதுரையில் உள்ள வீட்டில், கோவில் கட்டி வருகிறார். இதுகுறித்த அறிவிப்பை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ வெளியிட்டு சமீபத்தில் அறிவித்திருந்தார். இயல்பிலேயே கருணை குணம் கொண்ட முத்து, சமீபகாலமாகவே முக்கியமான பண்டிகை நாட்களில், தன்னுடைய வீட்டு பகுதிகளில் வசித்து வருவோருக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
பச்சரிசி: அந்தவகையில், பொங்கல் பண்டிகையை, தன்னுடைய வீட்டில் அருகிலுள்ள ஏழை எளியவர்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவியாக கரும்பு, வேட்டி, சேலைகள், ஒரு கிலோ பச்சரிசியை முத்து வழங்கினார்.
இது குறித்து மதுரை முத்து சொல்லும்போது, "நான் இருக்கும் பகுதி கிராம பகுதி. நான் தினமும் வாக்கிங் போகும்போது, என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, ஆதரவற்ற முதியவர்களை தேர்ந்தெடுத்து, என்னால் முடிந்த உதவியை செய்வது வழக்கம்.. இந்த முறை அவர்களுக்கு கரும்பு, வேஷ்டி சேலைகள் கொடுத்திருக்கிறேன்.. அவர்களும் சந்தோஷமாக கொண்டாடட்டும்,
பப்ளிசிட்டி: இதெல்லாம் பப்ளிசிட்டிக்காக இல்லை.. சின்ன ஒரு மனதிருப்திக்காக என்னைப் பார்த்து நான்கு பேர் செய்தால் அதுதான் எனக்கு வெற்றி. நிறைய பேர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று சம்பாதிச்சு என்னத்த பண்ணப் போற என கேட்டு இருக்கிறார்கள்.
இப்போது இந்த உதவிகளை செய்கிறேன். திருமங்கலம் அரசப்பட்டி எனது சொந்த ஊர்.. அங்கு என்னுடைய அப்பா, அம்மா, மனைவிக்காக கோயில் கட்டியுள்ளேன். இன்னும் 15 நாட்களில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதில் 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளேன்.
சின்ன சந்தோஷம்: நாம் கண்ணில் பார்க்கிறவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்தால் என்னுடைய பெற்றோர்களே என்னை வாழ்த்துவது போல் சின்ன சந்தோஷம்.. இந்த வருஷம் எல்லோருக்கும் சந்தோசமாக அமையவில்லை என்றாலும் அமைய வைப்போம் பொங்கல் வாழ்த்துக்கள்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications