Magarasi Serial: நம்ம ராமநாதபுரத்து பொண்ணு செம அழகா... நேர்த்தியான மேக்கப்ல.. சோ கியூட்!
சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகை திவ்யா நம்ம ராமநாதபுரத்து பெண்.
ரொம்ப அழகாக இருக்கிறார்... மேக்கப் போட்டு இருந்தாலும் கண்களை உறுத்தாமல் நேர்த்தியாக செம கியூட்டா இருப்பதை சொல்லியாக வேண்டும்.
சொந்த குரலில் பேசி நடிக்கும் நடிகையான இவர் மகராசி சீரியலில் அழகான வில்லியாக நடித்து அசத்தி இருக்கார்.

சுமங்கலி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுமங்கலி சீரியலில் நடித்து வந்தார் திவ்யா. புதுப்புது சீரியல்களின் வரவால் அந்த சீரியல் பாதியின் நின்று போன நிலையில், இந்த அழகிக்கு ஏனோ வாய்ப்பு இல்லாமல் போனது. சன் டிவி நடத்திய சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சியில் தனது சகோதரருடன் இவர் கலந்துகொண்டு இருந்தார்.

சூப்பர் சிஸ்டர்
சன் டிவியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சியும் பாதியில் நின்று போன நிலையில், இவர் வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தார். மகராசியில் இவர் நடித்து வரும் கதாபாத்திரத்தில் வேறு நடிகை நடித்து வந்த நிலையில், அவர் விலகிவிட இவருக்கு வாய்ப்பு கிடைத்து, இப்போது ராகினியாக திவ்யா நடித்து வருகிறார்.

இளம் வில்லி
மகராசி சீரியலில் அழகிய இளம் வில்லியாக நல்ல கதாபாத்திரம் திவ்யாவுக்கு அமைந்து இருக்கிறது. சொந்த குரலில் பேசி நன்றாகவும் நடித்து வருகிறார் திவ்யா. மிகவும் அழகாக இருக்கும் திவ்யா முகம் முழுக்க மேக்கப் போட்டு இருந்தாலும் கண்களை உறுத்தாமல் இருப்பதும் பார்க்க பிளசண்ட்டாக இருக்கிறது.

உடன் நடிக்கும்
திவ்யா நிறைய மேக்கப் போடுவார்... மேக்கப் கிட் வித்தியாசமாக வைத்து இருப்பார்.. எங்கு போனாலும் அங்கு கிடைக்கும் மேக்கப் பொருட்களை வாங்கி குவிப்பார் என்பதுதான் உடன் நடிக்கும் நடிகைகள் திவ்யா குறித்து கூறும் முக்கிய கம்பளைண்ட்ஸாக கூட இருந்தது. ஆனால், அந்த புகார்கள் இவருக்கு பிளஸாக அமைந்து விட்டது.












Click it and Unblock the Notifications