Magarasi Serial: குழந்தையை தாண்டச் சொல்றாய்ங்களேப்பா... முந்தானை முடிச்சு சீனு!
சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் என்னடா இது பாரதிக்கு வந்த சோதனை என்பது போல, பாரதி அந்த வீட்டு மருமகள்தானா என்று குழந்தையை கீழே போட்டு தாண்ட சொல்றாங்க அந்த வீட்டு ஒல்லியான வில்லி.
மகராசி சீரியல் சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகுது. மகராசி சீரியலை ஆரம்பத்தில் ஆன்மீக விரும்பிகள் கூட பார்க்க ஆரம்பித்தனர்.
இப்போதும் இந்த சீரியல் ஆன்மீகவாதிகளின் சின்ன எதிர்பார்ப்பில் சென்று கொண்டு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆன்மீக வாதிகள் எதற்கு?
மகராசி சீரியலை ஆன்மீக வாதிகள் எதற்கு பார்க்க ஆரம்பித்தார்கள் என்றால், சீரியல் ஆரம்பிக்கும் முன்னர் ப்ரோமோவில் ஹரித்துவாரில் கதை துவங்குவது போல காண்பித்தார்கள். ஆரம்ப சில எபிசோடுகளும் ஹரித்வாரின் அழகை எடுத்துக் காண்பிப்பதாகவே இருந்தது. உத்திரகன்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கங்கை நதியின் நடுவில் பெரிய சிவன் சிலை அனைவருக்கும் பிடித்த ஒன்று. இந்த இடத்தை இன்னும் கூட அடிக்கடி காண்பித்து வருகிறார்கள்.

இன்னும் ஃபிளாஷ் பேக்கில்
இன்னும்கூட ஃபிளாஷ் பேக்கில் ஹரித்த்வாரை காண்பிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் பலர் எதிர்பார்த்து வருகின்றனர். இதை சீரியல் எடுப்பவர்கள் உணர்ந்துக்கொண்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது போல ஹரித்துவார் காட்சிகளை நீட்டித்தால் நன்றாக இருக்கும். இப்போதெல்லாம் சீரியல்களில் வித்தியாசமான லொக்கேஷன்களை காண்பிப்பதைத்தான் விரும்புகிறார்கள். கதையில் அந்த மாதிரி வாய்ப்பு இருக்கும்போது அதை பயன்படுத்தி இந்த மாதிரி லொக்கேஷன்ஸ் காண்பிக்கலாமே!

ஒல்லியான வில்லி
மகராசியில் ஒல்லியான வில்லியாக பாரதிராஜா கிழக்குச் சீமையிலே படத்தில் அறிமுகப்படுத்திய நடிகையான அஷ்வினி நடிச்சு இருக்கார். இவர் அதிகம் பேசுவதும், தேள் கொடுக்கு போல வார்த்தைகளால் கொட்டுவதும் என்று நன்றாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு. இப்போது சின்னத் திரையிலும் விருது வாங்க போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு நடிக்காத துவங்கி இருக்கிறார்கள். அவார்ட் கேட்டகிரி வேறு வில்லி, இளம் வில்லி என்று பல வாய்ப்புக்களை தருகிறது.

குழந்தையை தாண்ட
ஹரித்துவாரில் இருந்து தமிழரசன் கையில் குழந்தையுடன் வரும்போது ரயிலைப் பிடிக்க ஓடிவந்த பாரதிக்கு கைக்கொடுக்கிறான். அவள் சிதம்பரம் வரை வந்துவிட, சிதம்பரத்தில் தமிழை அழைக்க வந்தவங்க, பாரதியை தமிழின் பொண்டாட்டின்னு நினைச்சுக்கறாங்க. ஆனால், பாரதி தமிழின் காணாமல் போன அண்ணன் புவியின் பொண்டாட்டின்னு தெரிய வருது.இந்த வீட்டு மருமகள்தான்னு ஒல்லியான வில்லி, குழந்தையை கீழே போட்டு தாண்டி நிரூபின்னு சொல்றாங்க. இதைத்தாங்க முந்தானை முடிச்சு சீனுன்னு சொன்னோம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications