ஏழைப் பெண்ணை துரத்தி.. அம்மன் நகைகளை போட்டு.. ஆமா, இவங்க என்ன டிசைன்?
சென்னை: சன் டிவியின் மகாலட்சுமி சீரியல் பத்தி பேசி ரொம்ப நாளாச்சு. பரம்பரை ஜமீன், கோயில் தர்மகர்த்தான்னு நல்லதொரு குடும்பம் இந்த சீரியலில் இருக்கு.
நல்ல குடும்பம் இருந்தா அதை கெடுக்க ஒரு குடும்பம்... நல்ல குடும்பத்து ஆட்களுடன் நட்பு வச்சுக்கிட்டு குடும்பத்தை கெடுக்கற கதை இதுல வரலேன்னா.... நாம் இதை சீரியல்னு எடுத்துக்க முடியுமா?
ஐராவதி பெத்த பையன் மதன் குமார், கிராமத்துல கட்டிடம் கட்டும்போது பார்வதின்னு ஒரு பெண்ணை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறதா வாக்கு கொடுக்கறான். கோயிலில் குங்குமம் வச்சுவிடறான்.
இதல்லாம் எதுக்குன்னு பார்வதிக்குத்தான் தெரியலை, நமக்கு தெரியாதா.. பார்வதியை அடையத்தான். பிறகு அடிக்கடி பார்வதியும் சம்மதிக்க, வயித்துல இப்போ குழந்தை உண்டாயிருது .
அதுக்குள்ள நம்ம ஆளு, மதன் குமார் எஸ்கேப் ஆகி வீட்டுக்கு வந்துடறான். பார்வதிகிட்ட எங்க ஊர் திருநெல்வேலின்னு சொன்னவன், பேரு குமார்னு மட்டும் சொல்லிடறான். சிம்கார்டையும் தூக்கிப் போட்டுட்டான்.
மகாலட்சுமியின் நாத்தனாரை ஐராவதி அம்மா தன் மகனுக்கு பொண்ணு பார்த்துடறாங்க. பார்வதியோட குமாரை கண்டு பிடிச்சு உன்னை உன் ஊருக்கு அனுப்பி வைக்கறேன்னு மகாலட்சுமி சொல்லி, மாமியாரின் நாத்தனார் வீட்டில் தங்க வைக்கறா.
மகாலட்சுமி மாமியாரின் நாத்தனார், அவங்க பொண்ணு ரெண்டு பேரும் ஐராவதி கூட சேர்ந்து, அம்மனுக்கு சாத்த வேண்டிய நகைகளை தங்கள் வீட்டில் வச்சுக்கிட்டு, போலி நகைகளை பூசாரியை மிரட்டி குடுத்துடறாங்க.
பொண்ணு என்னடான்னா அம்மன் நகைகளை தான் போட்டு அழகு பார்க்குது. அம்மாவும் , மதன்குமாரை பெத்த ஐராவதியும் சேர்ந்து, பார்வதியின் காதலன் குமார் தூத்துக்குடியில் இருக்கறதா நம்ப வச்சு, கர்ப்பிணிப் பெண்ணை ஊரையே விட்டு துரத்தறாங்க.கடைசியில பார்வதி தேடி வந்தது ஐராவதி பையன் மதன்குமாரைத்தான்.
இப்படி எல்லாம் ஏமாத்தறாங்களே.. இந்த பொம்பளைங்க என்ன டிஸைனா இருப்பாங்க?