Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Malar serial: அவள் செய்த கொலை பற்றி அவளிடமே நோட்ஸ் எடுக்க... அய்யோ பாவம் மலர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல், எந்த பக்கம் திரும்பினாலும் மலருக்கு அணை போடுவது போல சோதனையாகவே இருக்கிறது. என்னதான் செய்வாள் பாவம்.

தற்காப்புக்கு ஒரு கொலை செய்தாள். மூன்று வருடமாக இந்த கொலை பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், திருமணம் செய்துகொள்ள வந்தவன் அசிஸ்டென்ட் கமிஷனர் கதிர். அவன் இவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருக்க, மலர் முள் மேல் நிற்பது போல தவிக்கிறாள்.

கடைசியில் கல்யாணமும் நடந்துருது.அதே நேரத்தில் மலர் கொலை செய்த கவுசிக் என்பவனின் கேஸும் மலர் புருஷன் கதிரிடம் வந்து சேர்கிறது. இனி எப்படி அவள் நிம்மதியாக இருப்பாள்?

மிரட்டல் நண்பன்

மிரட்டல் நண்பன்

கவுசிக் நண்பன் மலர் கவுசிக் பின்னால் சுற்றியதை தெரிந்து, மலர் இப்போது அசிஸ்டென்ட் கமிஷனர் மனைவி என்பதையும் தெரிந்துகொண்டு, உன் புருஷன் கிட்டே சொல்லிடுவேன், உன் பின்னால்தான் கவுசிக் சுத்தினான்னு என்று சொல்லி மிரட்டி பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்கிறான். மாமியார் ஆசையாக மலருக்கு போட்ட வளையலை பிடுங்கிக் கொள்கிறான்.பத்து லட்சம் ரூபாய் பணத்துக்கு மலர் எங்கே போவாள்?

கதிரின் அத்தை

கதிரின் அத்தை

கதிரின் அத்தையும், அவங்க மகள் பூஜாவும் சேர்ந்து மலர் இந்த வீட்டில் கதிருடன் வாழக் கூடாது என்று பல விதத்திலும் டார்ச்சர் செய்கிறார்கள். அதையும் பொறுத்துக் கொண்டு, கவுசிக் நண்பன் தரும் டார்ச்சரையும் பொருத்துக்கொண்டு, இடையில் கதிர் கவுசிக் கேஸ் பற்றி பேசுவதையும் கேட்டுக் கொண்டு பயந்து பயந்து, பின்னர் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு இருக்கும் மலரை பார்க்கையில் பரிதாபம் பொத்துக் கொண்டு வருகிறது.

பணம் எப்படி

பணம் எப்படி

பத்து லட்சம் ரூபாய் பணம் எப்படி புரட்டுவது என்று பேதை பெண் கலக்கத்தில் இருக்க, கவுசிக் கேஸை விசாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கவுசிக் அக்காவான கஷனரின் பெண் கட்டளை போடுகிறாள். பூனை மாதிரி எல்லா கேஸிலும் வாயை வைக்காதீங்க.ஒரு தட்டில் சாப்பிட்டு முடிக்கும் நாய் மாதிரி ஒரே கேஸில் கவனம் செலுத்துங்கன்னு சொல்லிட்டு போறா. வீட்டுக்கு கவலையோடு வருகிறான் கதிர்.

முகத்தை பார்த்தால்

முகத்தை பார்த்தால்

எத்தனையயோ கஷ்டம் வந்தாலும் உன் முகத்தைப் பார்த்தால் எனக்கு எல்லாம் பறந்து நிம்மதி கிடைக்குது. ஃபிரஷாகிடறேன் மலர் என்று கதிர் சொல்ல, நெகிழ்ந்து போன மலர் நாம் ஏன் கவுசிக் ஃபிரண்டுக்கு பணம் தரணும்? பணம் தராம விட்டுட்டா அவன் கதிர் கிட்டே சொல்லி, அவருக்கு நம்மை காட்டிக் கொடுக்கட்டுமேன்னு நினைக்கிறாள். இப்படி எப்போதும் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கும் மலரிடமே சென்று, மலர் இந்த நோட்டை பிடிச்சுக்கோ.கவுசிக் கேஸில் நான் சொல்ல சொல்ல நீ குறிப்பெடுன்னு சொல்றான். எப்படி இருக்கும் மலருக்கு?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+