Malar serial: அவள் செய்த கொலை பற்றி அவளிடமே நோட்ஸ் எடுக்க... அய்யோ பாவம் மலர்
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல், எந்த பக்கம் திரும்பினாலும் மலருக்கு அணை போடுவது போல சோதனையாகவே இருக்கிறது. என்னதான் செய்வாள் பாவம்.
தற்காப்புக்கு ஒரு கொலை செய்தாள். மூன்று வருடமாக இந்த கொலை பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், திருமணம் செய்துகொள்ள வந்தவன் அசிஸ்டென்ட் கமிஷனர் கதிர். அவன் இவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருக்க, மலர் முள் மேல் நிற்பது போல தவிக்கிறாள்.
கடைசியில் கல்யாணமும் நடந்துருது.அதே நேரத்தில் மலர் கொலை செய்த கவுசிக் என்பவனின் கேஸும் மலர் புருஷன் கதிரிடம் வந்து சேர்கிறது. இனி எப்படி அவள் நிம்மதியாக இருப்பாள்?

மிரட்டல் நண்பன்
கவுசிக் நண்பன் மலர் கவுசிக் பின்னால் சுற்றியதை தெரிந்து, மலர் இப்போது அசிஸ்டென்ட் கமிஷனர் மனைவி என்பதையும் தெரிந்துகொண்டு, உன் புருஷன் கிட்டே சொல்லிடுவேன், உன் பின்னால்தான் கவுசிக் சுத்தினான்னு என்று சொல்லி மிரட்டி பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்கிறான். மாமியார் ஆசையாக மலருக்கு போட்ட வளையலை பிடுங்கிக் கொள்கிறான்.பத்து லட்சம் ரூபாய் பணத்துக்கு மலர் எங்கே போவாள்?

கதிரின் அத்தை
கதிரின் அத்தையும், அவங்க மகள் பூஜாவும் சேர்ந்து மலர் இந்த வீட்டில் கதிருடன் வாழக் கூடாது என்று பல விதத்திலும் டார்ச்சர் செய்கிறார்கள். அதையும் பொறுத்துக் கொண்டு, கவுசிக் நண்பன் தரும் டார்ச்சரையும் பொருத்துக்கொண்டு, இடையில் கதிர் கவுசிக் கேஸ் பற்றி பேசுவதையும் கேட்டுக் கொண்டு பயந்து பயந்து, பின்னர் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு இருக்கும் மலரை பார்க்கையில் பரிதாபம் பொத்துக் கொண்டு வருகிறது.

பணம் எப்படி
பத்து லட்சம் ரூபாய் பணம் எப்படி புரட்டுவது என்று பேதை பெண் கலக்கத்தில் இருக்க, கவுசிக் கேஸை விசாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கவுசிக் அக்காவான கஷனரின் பெண் கட்டளை போடுகிறாள். பூனை மாதிரி எல்லா கேஸிலும் வாயை வைக்காதீங்க.ஒரு தட்டில் சாப்பிட்டு முடிக்கும் நாய் மாதிரி ஒரே கேஸில் கவனம் செலுத்துங்கன்னு சொல்லிட்டு போறா. வீட்டுக்கு கவலையோடு வருகிறான் கதிர்.

முகத்தை பார்த்தால்
எத்தனையயோ கஷ்டம் வந்தாலும் உன் முகத்தைப் பார்த்தால் எனக்கு எல்லாம் பறந்து நிம்மதி கிடைக்குது. ஃபிரஷாகிடறேன் மலர் என்று கதிர் சொல்ல, நெகிழ்ந்து போன மலர் நாம் ஏன் கவுசிக் ஃபிரண்டுக்கு பணம் தரணும்? பணம் தராம விட்டுட்டா அவன் கதிர் கிட்டே சொல்லி, அவருக்கு நம்மை காட்டிக் கொடுக்கட்டுமேன்னு நினைக்கிறாள். இப்படி எப்போதும் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கும் மலரிடமே சென்று, மலர் இந்த நோட்டை பிடிச்சுக்கோ.கவுசிக் கேஸில் நான் சொல்ல சொல்ல நீ குறிப்பெடுன்னு சொல்றான். எப்படி இருக்கும் மலருக்கு?
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications