நாகப்பன் மகள் யாழினி தேவராஜ் வீட்டுக்கு தில்லா போறாளே.. அப்போ யாருதான் நல்லவங்க?
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் தன்னை நம்பி இருக்கும் மக்கள் வறுமையில் வாடுவதை அவரால் சகிச்சுக்க முடியலை.
அதனால இத்தனை வருஷங்கள் தன்னுடைய உயிருக்கும் மேலாகப் போற்றி பாதுகாத்து வச்சிருந்த மீன்பிடி படகுகளை வித்து மக்களுக்கு உதவலாம்னு நினைக்கறார்.
முகம் ஒரு மாதிரி இருக்கேன்னு நாகப்பனின் மனைவி கேட்டும் உண்மையை சொல்லாத அவர் ,மகள் யாழினியிடம் சொல்லிடறார்.
தமிழ் செல்வியாகிய நான்... உறுதி மொழி என்னாச்சு? கல்யாணத்துக்கு வந்து நின்னாச்சே...!
தேவராஜ் வீட்டுக்கு யாழினி
அப்பாவின் வருத்தமான நிலைமையை கேட்டுட்டு ரொமப தில்லா எதிரி தேவராஜ் வீட்டுக்கே வர்றா.. ஏய்...நம்ம வீட்டுக்கு மகாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு வர்றா...அவளுக்கு யாரும் எந்த இடைஞ்சலும் குடுக்கக் கூடாதுன்னு தேவராஜ் சொல்றார்.
தேவராஜ் அருகில் யாழினி
தேவராஜ் அருகில் வந்து நின்ற யாழினி...ஊர் ஜனங்க தலைவரா தேர்ந்தெடுத்தவங்க என் அப்பா. ஆனா, நீங்க தலைவர்னு சொல்லிக்கிட்டு எங்க குடும்பத்தையும், எங்களை சேர்ந்த மக்களின் குடும்பத்தையும் கஷ்டப் படுத்தறீங்க. உதாரணத்துக்கு கோயில் திருவிழாவை கூட சொல்லலாம்.
படகுப் போட்டி இப்போ
இப்போ படகுப் போட்டியில் மறுபடியும் உங்களைப் பத்தி நிரூபிச்சு இருக்கீங்க .என் அப்பா பிடிக்க வேண்டிய மீன் வலையில பெரிய ஓட்டை போட்டது உங்க ஆளுங்கதான். அது போலீஸ்காரங்களுக்கு தெரிஞ்சு அப்பாகிட்ட வந்து கேஸ் குடுக்க சொன்னாங்க.
அப்பா கேஸ் கொடுத்திருந்தால்
அப்பா கேஸ் கொடுத்து இருந்தால் இப்போ உங்க மேல எஃப் ஐஆர் பதிவு பண்ணி விசாரணை ஆரம்பிச்சு இருப்பாங்க.ஆனா, அடுத்தவங்ககிட்ட உங்களை விட்டு குடுக்க அப்பா நினைக்கலை.இது என் அப்பாவோட பெருந்தன்மை. இப்போகூட நீங்க என் அப்பாவுக்கு கெடுதல் செய்தவர். ஆனா, உங்களை மரியாதை குறைவா பேச எனக்கு வாய் வரலை.இதுவும் என் அப்பா பெரியவங்களை மதிக்க கத்துக் கொடுக்கணும்னு சொல்லி வளர்த்த வளர்ப்புதான்... நிச்சயம் நியாயம் ஒரு நாளைக்கு ஜெயிக்கும்னு சொல்றா.
பெண்கள் இப்படித்தான் தைரியமா அநியாயத்தை தட்டி கேட்க புறப்படணும்!