ஆட்டத்தை ஆரம்பித்த நயன்தாரா.. நடிகர் பிரபுவையும் ஏமாத்திட்டாங்க.. கேரளாவிலும் சிக்கல்: பிரபலம் நறுக்
சென்னை: "நயன்தாராவுக்கு, யார் மத்தியஸ்தம் செய்தாலும் பிடிக்காது, தயாரிப்பாளர் சங்கத்திலும் தகராறு, நடிகர் சங்கத்திலும் தகராறு.. இப்போது பிரபுவிடமும் சமாதானம் பேசாமல், கடைசியில் அவர் கோர்ட்டுக்கே போய்விட்டார்" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.
Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "சிவாஜி புரொடக்ஷனுக்கும், நயன்தாராவுக்கும் பிரச்சனை துவங்கியிருக்கிறது.. நயன்தாரா, தனுஷை மட்டும் ஏமாற்றவில்லை, பிரபுவையும் சேர்த்தே ஏமாற்றியிருக்கிறார்.

சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த சந்திரமுகி படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அதற்குரிய பணத்தையும் அப்போதே வாங்கிவிட்டார். ஆனால், அந்த படத்திலிருக்கும் சில காட்சிகளை தன்னுடைய, திருமண ஆவண படத்துக்காக பயன்படுத்தி கொண்டுள்ளார் நயன்தாரா..
திருமண ஆவண படம்: இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 50 கோடி ரூபாயை நயன்தாரா வாங்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சந்திரமுகி படத்தின் தயாரிப்பாளரான பிரபுவிடம், அனுமதி கேட்கணும்தானே? அவர் அனுமதியை பெறாமல் எப்படி சந்திரமுகி சீன்களை, தன்னுடைய படத்திற்கு பயன்படுத்த முடியும்?
இதைத்தானே தனுஷூம் அப்போது கேட்டார்.. கடைசிவரை தனுஷிடம் சமாதானம் பேசாததால், கோர்ட்டுக்கு போய்விட்டார். அதேபோல பிரபுவும் நயன்தாராவிடம் கேட்டிருப்பார் போல.. பிரபுவிடமும் சமாதானம் பேசவில்லை.. கடைசியில் பிரபுவும் கோர்ட்டுக்கு போயிட்டாரு.. இப்போ நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். எத்தனை பேரைதான் நயன்தாரா ஏமாத்துவாங்க? இதுக்கு ஒரு எல்லையே கிடையாதா?
பேச்சுவார்த்தை: இறங்கி வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியிருக்கலாமே? தன்னால் இவ்ளோ தொகைதான் தரமுடியும் என்று சொல்லியிருக்கலாமே? அதைவிட்டுட்டு, தனுஷை தேவையில்லாமல், திட்டி அறிக்கை விட்டாச்சு.. தன்னிடம் நயன்தாரா அதுகுறித்து பேசவேயில்லை, அவர் பொய் சொல்கிறார் என்று தனுஷின் அப்பா சொல்கிறார்.
வாடகை தாய் மூலமாக குழந்தைகளை வளர்த்துட்டு வரும்போது, அதை சிக்கல் இல்லாமல் கொண்டுபோக வேண்டியதுதானே? கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, மாதவனின் உல்லாச படகில் சந்தோஷமாக இருக்க தெரியுது? நியூஇயர்-க்கு வெளிநாட்டில் கணவனுடன் கொண்டாட தெரியுது? நீங்க சந்தோஷமா இருங்க, அதுக்காக அடுத்தவர் பாவத்தை ஏன் வாங்கிக்கணும்? எல்லார் வாயிலும் ஏன் நிக்கணும்?
மியூசிக் ஆல்பம்: நயன்தாராவுக்கு, யார் மத்தியஸ்தம் செய்தாலும் பிடிக்காது, தயாரிப்பாளர் சங்கத்திலும் தகராறு, நடிகர் சங்கத்திலும் தகராறு.. இப்படித்தான் கேரளாவிலும் , எதோ இசை ஆல்பத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்தி விட்டாராம்.. இப்போது அவர்களிடமும் மாட்டிக் கொண்டிருக்கிறார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.












Click it and Unblock the Notifications