Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படீன்னா பாட்டிக்கா முத்தம்.. .ஐயகோ...!

Subscribe to Oneindia Tamil

சென்னை:கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் ஒரு வீட்டில் போலீஸ், ராணுவ அதிகாரி ரெண்டு பேரும் இருந்தால் வீடு எப்படி இருக்குமோ அதை சொல்லும் கதை.

ஆனா,இந்த சீரியலில் காவல் துறை துணை ஆணையராக வேலை பார்க்கும் கதிருக்கு மலரை மணம் பேசி முடிக்க்கறாங்க . மலருக்கு காவல்துறை ஆணையர்னு சொன்னவுடனே பயம் வந்துருது.

காரணம் தற்காப்புக்காக மூன்று வருடங்களுக்கு முன் ஒருத்தனை குத்து விளக்கால் மண்டையில் அடித்து அவன் சாய்ந்துவிட்டதாக மேலோட்டமாக காமிக்கிறார்கள்.

மலர் மேல கதிருக்கு

மலர் மேல கதிருக்கு

கதிருக்கு மலர் மேல சொல்ல முடியாத அளவுக்கு காதல். மலருக்கு கதிரை வெகுவாக பிடித்து இருந்தாலும்,உள்ளுக்குள் பயம் அவளை வாட்டி வதைக்குது. கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் நார்மல் நிலைக்கு வந்திருக்கா.

மெதுவாக கதிருடன்

மெதுவாக கதிருடன்

இப்போதுதான் கதிருடன் மெதுவாகப் பேசஆரம்பிச்சு இருக்கா.அவன் தொட்டாலும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவனின் ஸ்பரிசத்தை அனுபவிக்க துவங்கி இருக்கா.கதிர் மலர் ரொமான்ஸ்தான் இப்போது கலர்ஸ் தமிழ் டிவியின் ஹாட் டாபிக் .கதிர் படு அமோகமாக ரொமான்ஸ் பண்றான்.

போன் மலருக்கு

போன் மலருக்கு

மலருக்கு டியூட்டியில் இருக்கும் பொது போன் செய்யறான். அப்போது தங்கச்சி சுவாதி எடுத்து பேசுக்கா மாமா பாவம்னு சொல்ல மலரும் எடுத்து பேசறா.மலர் என் மனசு முழுக்க நீதான் இருக்கே..நான் கண்ட்ரோல் இல்லாம இருக்கேன். எப்படி நார்மல் நிலைக்கு வரப்போறேன்னு எனக்கே தெரியலை மலர்...

உன் கையில்தான் எல்லாம்

உன் கையில்தான் எல்லாம்

மலர் எல்லாம் உன் கையில்தான் மலர் இருக்கு..என்னை ஆசையா லவ் பண்ணுவியான்னு கேட்கறான்...சொல்லுங்கன்னு இவள் வெட்கப்பட மாமா அக்கா வெட்கப்படறான்னு... சுவாதி சொல்ல.. .நீ வெளியில போ சுவாதின்னு கதிர் சொல்றான். .

போனை பாட்டி

போனை பாட்டி

அதற்குள் பாட்டி போனை வாங்கி காதில் வச்சுக்கறாங்க ...அந்த பக்கம் கதிர் என் மனசுக்குள்ள இருக்கும் எல்லா காதலையும் சேர்த்து வச்சு உனக்கு ஒரு முத்தம்னு கொடுக்க...என்னடி மாப்பிள்ளை போனில் முத்தம் குடுக்கறாருன்னு சொல்லிட்டு போனை குடுத்துட்டு போறாங்க...

நான் குடுத்தது

நான் குடுத்தது

மலர் நான் குடுத்தது எப்படி இருந்துச்சுன்னு கேட்க...என்னா குடுத்தீங்கன்னு மலர் சிரிச்சுகிட்டே கேட்கறா...என்ன மலர்...எவ்வள்வு ஆசையைத் தேக்கி வச்சு குடுத்தேன்... எப்படி இருந்துச்சுன்னு சொன்னா என்னன்னு கேட்கறான்.

பாட்டிகிட்ட கேட்டுட்டு

பாட்டிகிட்ட கேட்டுட்டு

இருங்க பாட்டிகிட்ட கேட்டுட்டு சொல்றேன்.. .ஏன்னா அவங்கதான் போனை வங்கிக் காதுல வச்சுக்கிட்டாங்கன்னு சொல்லி சிரிக்கறா..அப்போ என் அத்தனை ஃபீலிங்ஸ் முத்தத்தையும் பாட்டிக்கா குடுத்தேன்னு ஃபீல் பன்றான் கதிர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+