"பாண்டியம்மா வந்தாச்சு".. மீனா வீட்ல விசேஷம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: பாண்டியம்மா வந்தாச்சு என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா போட்டுள்ள ஸ்டேட்டஸால் ரசிகர்கள் ஹேப்பி அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறது. இது வழக்கமான கதைகளைப் போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பும் இருக்கிறது.
தற்போது இதில் வளைகாப்பு பங்க்ஷன் மிக சிறப்பாக நடைபெற்றது. 3 மணிநேரம் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பும் இருந்தது. அதில் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்து முடித்துவிட்டார்கள்.
கண்ணம்மா நீயாம்மா இப்படி போஸ் கொடுக்கறே.. ஜூம் போட்டு ரசிக்கும் ரசிகர்கள்!
மீனாவுக்கு பிரசவ வலி
சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வளைகாப்பு பங்ஷனில் திடீரென்று மீனாவிற்கு வலி வருவது போல வைத்ததும் உண்மையிலேயே ரசிகர்களும் பதறித்தான் போனார்கள். அவர் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருக்கும்போது அவரை அனைவரும் ஆர்வமாக எதிர் பார்ப்பது போல அந்த சீரியல் ரசிகர்களும் என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறார்கள்.
பாண்டியம்மா வந்தாச்சு
காரணம் அந்த சீரியலில் மீனாக நடித்துக்கொண்டிருக்கும் ஹேமாவும் உண்மையிலேயே நிறைமாதமாக இருக்கிறார். அதனால் இவர்கள் ரொம்பவே இந்த சீரியலில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட மீனாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறார்களாம்.
பெண் குழந்தை
ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர் வீட்டுக்குள் பாண்டி அம்மா வந்தாச்சு என்று ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். இந்த சீரியலில் மீனாவின் குழந்தையைத் தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னரே குடும்பமே சேர்ந்து பெண் குழந்தை பிறந்தால் பாண்டியம்மா என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே பிறந்திருச்சா
இதற்கு மீனா பலமாக எதிர்த்தாலும் தற்போது அவரே இப்படி ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருப்பது அந்த சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் உண்மையிலேயே இவருக்கு குழந்தை பிறந்து விட்டதா அல்லது சீரியலில் மட்டும்தான் இவருக்கு குழந்தை பிறந்தது போல காட்ட போகிறார்களா என்றெல்லாம் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து நடிப்பாரா மீனா
குழந்தை பிறந்தது போல காட்டினால் இனி அப்போ இந்த சீரியலில் ஹேமா தொடர்ந்து நடிக்க மாட்டாரா அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க போகிறார்களா என்று ஆர்வமாக இருக்கிறார்கள். சீரியலில் குட்டி அண்ணியாகவும் சின்ன மருமகள் ஆகவும் அனைவரின் மனதிலும் இடத்தைப் பிடித்தார் ஹேமா. தற்போது இது தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்று பல ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
கலகலப்பான வளைகாப்பு
இந்த சீரியலில் மீனாவின் வளைகாப்பு உண்மையிலேயே விசேஷமாக நடைபெற்றது . ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலின் ரசிகர்களும் ரொம்பவே என்ஜாய் தான் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு இடை இடையில் சீரியலில் வழக்கமான கதையை வைத்து அதில் வரும் சண்டைகளையும் வைத்து சீரியலே நன்றாகவே நகர்த்தி விட்டார்கள்.
அப்பாவின் கோபம்
அதிலேயும் ஹைலைட் ஆட்டம் பாட்டத்துடன் சந்தோஷமாக இருக்கும் போது மீனாவின் தந்தை சந்தோஷமாக இருந்து விட்டு ஹாஸ்பிடலில் சேர்த்து மறுபடியும் வேதாளம் புளிய மரத்தில் ஏறிய கதையாக இவரது குடும்பத்தை குறை சொல்ல ஆரம்பித்து விட்டார் . வேற ஹாஸ்பிடல் இல்லாமல் இங்கு வந்து சேர்த்துவிட்டார்கள் என் மகளுக்கு ஏதாவது ஆச்சுன்னா குடும்பத்தையே சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்.
3 மணி நேர விசேஷம்
ஒரு சந்தோஷமான நிகழ்ச்சியை காட்டிவிட்டு திடீரென்று இப்படி அனைவரையும் பதைபதைக்க வைத்துவிட்டார்கள் .மூன்று மணி நேரம் சீரியல் ஒளிபரப்பாக போகிறது என்று ரொம்பவும் ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு செந்தில் - ராஜலட்சுமியின் வளைகாப்பு பாடல்கள் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
ஹேமாவுக்காக வெயிட்டிங்
அதுவும் அந்த அனைத்து சீரியல் நடிகைகளும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் தான் அன்று அவர்களின் காத்திருப்புக்கு கிடைத்த பரிசு என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். சரி என்னதான் இருந்தாலும் ரொம்ப ஆர்வமாக காத்துக்கொண்டிருந்த மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது என்று செய்தி அந்த சீரியல் ரசிகர்களுக்கு சந்தோசமாக தான் இருக்கிறார்கள். நிஜத்திலும் ராஜாத்தியே பிறப்பாரா அல்லது ராஜா வரப் போறாரா.. ஹேமாவுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.