Pandian Stores 2: பாண்டியனை மீண்டும் ஏமாற்றும் கோமதி! இதற்கு மயில் பரவாயில்லை போல! மீனா போட்ட குண்டு
சென்னை: (Pandian Stores 2 serial today episode) விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி இரண்டாம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் மனதை மாற்றுவதற்காக கோமதி புது நாடகம் போடுகிறார். அதை நேரத்தில் ராஜியின் வாழ்க்கைக்காக கதிரும் முக்கிய முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சென்னை வந்த கதிர், ராஜி இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். ராஜி கோச்சிங் சென்டருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க, கதிர் வெளியில் காத்திருக்கிறார். குளித்து விட்டு வந்த ராஜியை பார்த்த கதிர், அவளின் அழகில் மயங்கி, "இன்னைக்கு என்ன இவ்வளவு அழகா இருக்க?" என்று கேட்கிறார். இதை சற்றும் எதிர்பாராத ராஜி வெட்கத்தில் நிற்கிறார்.

ராஜி வெட்கப்பட்டு விலக முயன்றபோது, அவளின் கையை பிடித்து இழுத்து கட்டியணைக்கிறார் கதிர். எதிர்பாராத இந்த செயலில் ராஜி இன்பதிர்ச்சி அடைகிறார். பின்னர் "கிளாஸுக்கு டைம் ஆகுது" என்று சொல்ல, கதிர் சுயநினைவுக்கு வந்து கிளம்பலாம் என்கிறார். இருவரும் ஆட்டோவில் கோச்சிங் சென்டருக்குச் செல்கிறார்கர்.
அங்கு ராஜியை கிளாஸில் விட்டுவிட்டு, அவளுக்கு ஒரு பேனா கொடுத்து, "நீ படிப்பில் மட்டும் கவனம் வை. மற்ற விஷயங்களை நான் பார்த்துக்குறேன்" என்று கதிர் சொல்ல ராஜி சந்தோஷத்தில் இருக்கிறார்.
இந்தப் பக்கம், கோபத்தில் இருக்கும் பாண்டியனை சமாதானப்படுத்த கோமதி பல முயற்சிகள் செய்கிறார். கடைக்கு போனால் பாண்டியன் டென்ஷன் ஆகிறார் என்பதால், வீட்டிலேயே தன்னை கவனிக்க ஒரு நாடகம் போட திட்டமிடுகிறார். திடீரென உடம்பு சரியில்லை என்று நடித்துக் காட்டுகிறார். இதைக் கேட்ட சரவணன் பயந்து போய், "நேத்தே சொல்லியிருக்கலாமே அம்மா, ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருப்பேனே" என்று கவலைப்படுகிறார்.
கோமதி, "என்னை பார்த்துக்க இங்க யாரு இருக்கா? உடம்பு சரியில்லைன்னா நானே என்னை பார்த்துக்கணுமா?" என்று மேலும் நாடகம் போடுகிறார். இதையெல்லாம் பாண்டியன் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார். கோமதியின் நாடகம் அரசிக்கு புரிந்துவிடுகிறது.
அப்போது பாண்டியன், சரவணனை கடைக்கு கிளம்பச் சொல்கிறார். சரவணன், "அம்மாவுக்கு உடம்பு சரியில்லைப்பா" என்கிறான். அதற்கு பாண்டியன், "அதுக்காக கடையை பூட்டி வைக்க முடியுமா? பக்கத்துல ஆட்டோ இருக்கு. வேண்டும்னா ஹாஸ்பிட்டல் போயிட்டு வரட்டும். நீ கடைக்கு கிளம்பு" என்று சொல்லி, சரவணனை அழைத்து செல்கிறார்.

இதைக் கேட்ட கோமதி கடும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார். பின்னர் அரசி, "நீ நாடகம் போடுறது எனக்கே தெரியும். அப்பாவுக்கு தெரியாதா? இதெல்லாம் விட்டுட்டு ரொமான்டிக்கா ஏதாவது பண்ணு" என்று அம்மாவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.
மற்றொரு பக்கம், மீனா ஆபீஸுக்கு கிளம்ப தயாராக இருக்க, செந்தில் வந்து "உன் புருஷன் பேச மாட்டேன் சொன்னதுக்கப்புறம் என்னோட பேச முயற்சி பண்ணினியா?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "அத்தை செய்தது சரிதான். அங்க நான் இருந்தது தான் பிரச்சனை. அதற்கான காரணத்தையும் உங்களிடம் சொல்லிட்டேன். இதற்கு மேல நான் எதுவும் செய்ய முடியாது" என்று பதில் சொல்கிறார்.
இதனால் கடுப்பான செந்தில், மீனா செய்த சாப்பாட்டை வேண்டாம் என்று தள்ளி வைக்கிறார். ஆனால் அதற்கு மீனா கவலைப்படாமல், "என்னோட வேலை பார்க்குறவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு போறேன்" என்று சொல்லி கிளம்புகிறார். இதனால் செந்தில் கோபம் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: பாண்டியன் செய்த செயலால் கதறி அழுத கோமதி.. மயில் அப்பாவுக்கு கிடைத்த ஆதாரம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications