For Daily Alerts
Just In
சிறுவனை ஆபாசமாக திட்டியதாக டிவி தொகுப்பாளினி மீது புகார்
நடிகர் சூர்யாவை கேலி செய்த டிவி தொகுப்பாளினி சிறுவனை ஆபாசமாக திட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கிண்டலாக பேசிய தனியார் டிவி தொகுப்பாளினி மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. சிறுவனை ஆபாசமாக திட்டியதாக தொகுப்பாளினி மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தானா சேர்ந்த கூட்டம் படம் வெளி வந்த போது நடிகர் சூர்யாவின் உயரத்தை கேலி செய்து பேசிய தொகுப்பாளினிகள் மீது அவரது ரசிகர்கள் கோபம் கொண்டனர். டிவி சேனல் முன்பாக போராட்டம் நடத்தினர்.
அதே தொகுப்பாளினி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாரிமுனை அருகே காரில் வந்த போது, மற்றொரு காரில் வந்த பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுவனை ஆபாசமாக திட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளினியும் சிறுவனின் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளாராம். ஆனால் காவல்நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Comments
English summary
Chennai police received a complaint against TV anchor from a parents alleging that she attacks their son.
Story first published: Monday, March 5, 2018, 17:14 [IST]