சந்திரா கிடைச்சுட்டா. ... கேள்விபட்டியளா... அஞ்சலிக்கும் விடுதலை கிடைச்சுட்டுதாமே...!
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலின் நேரத்தை சன் டிவி மாற்றி அறிவிச்சுது.. அடுத்த நாளே சந்திரா கதைப்படி காணாம போயிட்டாவ...
ராதிகா நடிக்கற சீரியல்ல அவுக இல்லாம கதை நல்லாருக்குமா சொல்லுங்க... நிறைய பேரு சந்திரகுமாரி சீரியலை வேண்டா வெறுப்பாத்தான் பார்த்தாகளாம்.
சனிக்கிழமை சந்திரா கிடைச்சுட்டான்னு சொன்னாக... இது நாள் வரைக்கும் ஆஸ்பத்திரியில் நினைவு இல்லாம இருந்தாகளாம். நினைவு திரும்பிருச்சு டாக்டர்.. பேரு கேட்டா சந்திரான்னு சொல்றாகன்னு நர்ஸு ஒண்ணு வந்து சொல்லுது.
டாக்டரும் அப்படியான்னு கேட்டுட்டு, பார்க்க போறாக.. கிட்ட போயி சந்திரான்னு கூப்பிடறாக.. அதுக்குள்ளே நேரம் முடிஞ்சுருச்சு.. அப்பவும் சந்திராவோட முகத்தை காமிக்கல. பின் தலையை காமிக்கறாக.. நாங்க யாருன்னு நினைக்கறது?
ஆசையா இருந்தா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துருங்களேன்.. எதுக்கு இப்படி அழுகுணி ஆட்டம்!
ராதிகாவே சந்திராவா வந்தாதான் எங்களால அந்த சீரியலை பார்க்க முடியும்.. இவுகளுக்கு பதில் அவுகன்னு ஏதாச்சும் போட்டு கடுப்பேத்தினீக.. சந்திரகுமாரி சீரியலை பார்க்க மாட்டோம்..
இந்த நேரத்துல ஜெயிலுக்கு போயிட்டு வந்த அஞ்சலிக்கு விடுதலை கெடைச்சுருது.. இந்த சமயத்துல ராதிகாவும் வந்து சந்திராவா நடிச்சாதானே சீரியல் களைக்கட்டும்... என்னங்க நீங்க.. புரியாம இருக்கீக...!