ரம்யா கிருஷ்ணனுக்கு .. இன்று வரை கை கொடுத்து வரும் ரீ என்ட்ரி
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் அறிமுகமானார். அறிமுகம் ஆனதில் இருந்து சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு படங்கள் இல்லை.
பேர் சொல்லும் பிள்ளை போன்ற நம்மவர் கமல்ஹாசனின்படங்களில் கூட அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான ரோல்கள் இல்லை.
தம்பி பொண்டாட்டி போன்ற படங்களில் முகம் தெரியும்படி நடித்தார். இப்படி முதல் படத்தில் நல்ல ரோல் கிடைத்தும் திறமை முழுவதும் வெளிப்படும்படியான வாய்ப்பு கிடைக்காமல்தான் இருந்தார்.
படையப்பா வாய்ப்பு
அடித்தது ஜாக்பாட் எனும்படி ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் நீலாம்பரியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். அந்த படத்தில் நடன திறமையையும் காண்பிக்க வாய்ப்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு.
அம்மன் படங்களில்
அடுத்தடுத்து அம்மன் போன்ற சுவாமி படங்களில் நடனம் ஆடி நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. கிடைத்த வாய்ப்புக்களை நன்றாக பயன்படுத்தி சினிமா உலகில் நிலைத்து நின்றார் ரம்யா கிருஷ்ணன். பட வாய்ப்புக்கள் இவரைத் தேடி வந்தன. சின்ன சின்னபட்ஜெட் படங்களையும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்தார்.
படையப்பாவுக்கு பிறகு
படையப்பாவுக்கு பிறகு அண்மையில் பாகுபலி இவருக்கு புகழ் சேர்க்கும் இன்னொரு சிறப்பு படமாகவும் அமைந்தது. அடுத்து பாகுபலி இரண்டாம் பாகத்துக்கும் இவரே தேவைப்பட்டார். ராசியான நடிகை என்கிற முத்திரையும் இவர் மீது குத்தப்பட்டது. சரித்தர படமா குரல் வளம், நடிப்புத் திறமை என்றால் ரம்யா கிருஷ்ணனுக்கே முதலிடம் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.
குயின் வெப் தொடர்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் குயின் வெப் தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இன்று புகழ் பெற்று இருக்கிறார் என்றால் அது இவரின் ரீ என்ட்ரி கொடுத்த புகழ். . இதன் பின்னால் இவரது உழைப்பு இருக்கிறது என்றாலும் அதுவும் மிகை அல்ல.