கேரவனுக்குள் என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு.. நடிகை கொடுத்த புகார்! 3 தேசிய விருது வாங்கிய இயக்குனர் கைது
சென்னை: மலையாள சினிமாவில் பல வருடங்களாக பெரிய பெயராக இருந்து வந்த இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஒரு இளம் நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்த சம்பவம் கேரளா முழுக்க பரபரப்பை கிளப்பியுள்ளது.

பெரிய சர்ச்சை
ரஞ்சித் பாலகிருஷ்ணன் சாதாரண இயக்குநர் இல்லை. கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர். மோகன்லால் நடித்த ராவணபிரபு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
"திரைக்கதா", "இந்தியன் ரூபீ", "ஸ்பிரிட்" போன்ற படங்களுக்கு தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். மலையாள சினிமாவில் ஒரு முக்கியமான இடம் வைத்திருக்கும் இவர் மீது இப்படி மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு எழுவது தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது.
இளம் நடிகையின் புகார்
சமீபத்தில் அவர் இயக்கி வந்த ஒரு புதிய படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அவருடைய குற்றச்சாட்டு என்னன்னா, படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, ரஞ்சித் தன்னை கேரவனுக்குள் அழைத்து தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றார் என்பதுதான்.
இந்த புகாரை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்காங்க. பாலியல் தொந்தரவு, சட்டவிரோதமாக அடைத்து வைப்பது, ஆபாச சைகைகள் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, தொடுபுழா பகுதியில் இருந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்து கொச்சிக்கு அழைத்து விசாரணை நடத்தி இருக்காங்க.
இது முதல் முறை அல்ல
இந்த சம்பவம் தான் பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. ஏன்னா, இது ரஞ்சித்துக்கு முதல் குற்றச்சாட்டு இல்லை. 2009-ல் "பாலேரி மாணிக்கம்" படப்பிடிப்பு சமயத்தில் ஒரு பெங்காலி நடிகை தவறான அணுகுமுறை பற்றி புகார் அளித்திருந்தார். இன்னொரு இளைஞரும் அவர்மீது புகார் கொடுத்ததாக தகவல்கள் வந்திருந்தது.
கேரளாவில் பெரிய சர்ச்சையை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கையிலும் இவரது பெயர் இடம்பெற்றதாக கூறப்பட்டது.அதாவது, முன்பும் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், இப்போது மீண்டும் அதே மாதிரியான புகார் எழுந்திருப்பது தான் இந்த விவகாரத்தை இன்னும் பெரிய அளவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
திரையுலகில் எழும் கேள்விகள்
இந்த சம்பவம் மலையாள திரையுலகுக்குள்ளேயே பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. "பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?", "படப்பிடிப்பு தளங்களில் என்ன நடக்கிறது?", "முன்னாடியே குற்றச்சாட்டு இருந்தவர்களுக்கு எப்படி மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது?" இப்படி பல கேள்விகள் இப்போது மீண்டும் எழ ஆரம்பிச்சிருக்கு.
- வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம்
- தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்
- ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம்
- கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு!
- பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி!
ஒரு பக்கம் பெரிய சாதனைகள், தேசிய விருதுகள்... மற்றொரு பக்கம் தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள்... இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து, ரஞ்சித் பாலகிருஷ்ணன் குறித்து இப்போது மக்கள் மனதில் கலவையான கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.
இந்த வழக்கு எப்படி திரும்பும், உண்மை என்ன என்பது விசாரணைக்கு பிறகுதான் தெளிவாகும். ஆனாலும், இந்த சம்பவம் மலையாள சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரிய அளவில் பேச வைக்க ஆரம்பிச்சிருக்கு.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே













Click it and Unblock the Notifications