ப்பா... என்னா அழகுடா.. ரட்சிதாவைப் பார்த்து பார்த்து ரசிக்கும்.. .ரசிகர்கள்!
சென்னை: என்னதான் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் பலரும் கவர்ச்சி பழமாக மாறிவிடுகின்றனர் .
ஆனால் தமிழ்புத்தாண்டு அதுவுமாக தமிழ் பாரம்பரிய முறைப்படி தேவதை போல மாறிய ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .
அதுவும் இந்த மாதிரி இவர் காலை வேளையில் தரிசனத்தை தருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
புத்தாண்டு தரிசனம்
வருடப்பிறப்பும் அதுவுமாக அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடலாம் என எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் இந்த லாக்டவுன் போட்டிருக்கும் காரணத்தினால் கோவிலுக்கு செல்ல முடியாததால் காலையிலேயே வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு ரிலாக்ஸாக போனை பார்த்ததும் என்ன அந்த கடவுளே போனக்குள் வந்துவிட்டதா என சில ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள்.
பட்டுப்புடவையில்
அந்த அளவிற்கு காலை வேலையில் தேவதை போல பட்டுப்புடவையில் மாறிய ரஞ்சிதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது .இதனை பார்த்ததும் பலபேர் எந்த மாதிரி வர்ணிப்பது என தெரியாமல் குழம்பி வருகின்றனர் .ஆனாலும் ப்ளூ கலர் பட்டுப் புடவையில் சிரித்த முகமாக அப்படியே மறைந்த சித்ராவின் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறார் எனவும் சில ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர் .
சித்ரா மாதிரியே இருக்காரே
இவரைப் பார்க்கும்போது சித்ராவின் சாயலில் இருக்கிறார் என சித்ராவின் ரசிகர்கள் பீல் பண்ணி இருந்தாலும் இவரும் சித்ராவும் நெருங்கிய தோழிகள் என்பது அவருக்கும் தெரியும் என்பதால் இவரைப் பார்த்து மனதை தைரியப்படுத்தி இருக்கிறார்களாம். என்னதான் இவர் விதவிதமாக போட்டோஸ்கள் எடுத்து குவித்து இருந்தாலும் இவருடைய உடை அலங்காரத்தையும் மேக்கப்பையும் பார்த்து அசந்து போன ரசிகர்கள் என்ன அழகு என வர்ணித்து வருகின்றனர்.
செம அழகி
ஆனாலும் சில ரசிகர்கள் பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகி என புகழ்ந்து வருகின்றனர். ரசிகர்கள் இப்படி புகழ்ந்தால் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா என்னதான் இவர் வளச்சி வளச்சி போஸ் கொடுத்து போட்டோஸ் வெளியிட்டாலும் அந்த இடுப்பு மடிப்பு அப்படியே அல்வா போல தெரிகிறதே கொஞ்சம் இறக்கி காட்டுனா ரம்யா பாண்டியனை தோற்கடித்து விடுவார் எனவும் கலாச்சி வருகின்றனர்.
செம ஆக்டிவ்
தற்போது இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனால்தான் அடிக்கடி இவர் போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .இன்ஸ்டாகிராம் டுவிட்டர் பேஸ்புக் என சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்துக்களையும் பதிவிட்டு வருவதால் அதிலேயும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர் .ஆனால் தன்னை பற்றி தவறாக பேசும் நெட்டிசன்களை பற்றி இவர் கவலைப்படுவதே இல்லையாம் .
சந்தோஷம் நிலைக்கட்டும்
ஆனாலும் பல ரசிகர்கள் இவரை சித்ராவின் சாயலில் இருக்கிறார் என கூறி வருவது இவருக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது .ஆனாலும் தினமும் நான் அழுது கொண்டேதான் இருக்கிறேன் என தன்னுடைய கவலையையும் தெரிவித்திருக்கிறார் .ஆனாலும் இந்த தமிழ் வருடப் பிறப்பில் அனைவரும் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும் என வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார்.