Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்பவே முடியலப்பா! நீ செஞ்ச உதவி பெருசு, ஆனால் இப்போ நாங்க! ரோபோ சங்கர் மகள் இந்திரஜா உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காமெடினாலே டக்குனு ஞாபகத்துக்கு வர்ற சில பேர்ல நடிகர் ரோபோ சங்கருக்கும் ஒரு பெரிய இடமிருக்கு. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாம, தன்னுடைய பன்ச் கவுண்டர்களாலும், டைமிங் காமெடியாலும் விஜய், தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் போன்ற பல நடிகர்களோட சேர்ந்து நடிச்சுப் பிரபலமானவர். மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்னு பல படங்கள்ல இவர் காமெடி பண்ணினதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அப்படி, மக்களோட மனசுல இடம் பிடிச்ச இந்த கலைஞனின் மறைவு, எல்லாரையும் சோகத்துல ஆழ்த்தி இருக்கு.

Robo Shankar Indraja Shankar

நம்பவே முடியல... கடைசி போராட்டம்

சினிமாவுல இவர் பெரிய அளவுல பிரபலமான சமயத்தில் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பி வந்தார். அப்போ, அவரோட குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால, பழையபடி குணமாகி, மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனா, விதி விளையாடிருச்சு.

ஒரு புது படத்திற்கான பூஜையில் கலந்துகிட்ட போது, திடீர்னு ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனையில சேர்த்தப்போ, முதல்ல அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, இரத்த அழுத்தம்தான் காரணம்னு மருத்துவர்கள் சொல்ல, அவரைப் பார்த்த எல்லோருக்கும் மனசுக்குள்ள ஒரு சின்ன பயம் வந்திருச்சு. பிறகு, மேல் சிகிச்சையில் அவருக்குக் கல்லீரல்ல பிரச்சனை இருப்பதும், செரிமானக் குழாயில் ரத்தக் கசிவு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில இருந்த ரோபோ சங்கர், செப்டம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். இவரோட இழப்பு, ஒட்டுமொத்த ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மகள் இந்திரஜாவின் கண்ணீர் பதிவுகள்

அப்பா இறந்ததில் இருந்து, இன்னும் அந்த அதிர்ச்சியில இருந்து மீள முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கார் அவரோட மகள் இந்திரஜா. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அப்பாவைப் பற்றிய பதிவுகளைப் போட்டுக்கிட்டு வர்றார்.

அவர் இறந்ததிலிருந்து நாலு நாள் கழிச்சு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு உருக்கமான போஸ்ட் போட்டிருந்தார். அதுல, "நீ எங்களை விட்டு போய் நான்கு நாள் ஆகுது... இன்னும் நம்ப முடியல. உன்னோட சிரிப்பு, அன்பு, நல்ல மனசு எல்லாமே எங்கேயோ இருக்குற மாதிரி இருக்கு. நீ எப்போதுமே பிறருக்காக நல்லது மட்டும்தான் செஞ்ச. எந்த நிலைமையிலயும் உதவ முன் வந்த"னு சொல்லியிருந்தார். "உன்னோட வாழ்க்கை குறுகியதா இருந்தாலும், உன்னோட நினைவுகள் என்றும் எங்க மனசுக்குள்ள நிலைச்சிருக்கும். உன்னால எத்தனை பேருக்குச் சிரிப்பு கிடைச்சிருக்கும், எத்தனை பேருக்கு நிம்மதி கிடைச்சிருக்கும்னு யோசிக்கும்போது, நீ ஒரு நல்ல ஆன்மான்னு தோணுது. நீ விட்டுட்டு போன வெற்றிடத்தை எதனாலயும் நிரப்ப முடியாது. ஆனா, உன் நினைவுகளோட நாங்க வாழ்வோம். எப்போதும் நீ எங்க பிரார்த்தனைகள்ல இருப்ப நண்பா"னு முடிச்சிருந்தார். ஒரு மகள் தன் அப்பாவை நண்பானு அழைச்சு எழுதின அந்த வரி, பல பேரோட மனசை உலுக்கிருச்சு.

மறுபடியும் சமீபத்துல, தன்னோட குழந்தைப்பருவத்துல அப்பாவோட எடுத்த ஒரு போட்டோவை ஷேர் பண்ணி, கேப்ஷன் எதுவும் போடாம, வெறுமனே அந்தப் போட்டோவை மட்டும் போட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள், எப்படி ஆறுதல் சொல்றதுனு தெரியாம, அவருக்கு கமெண்ட்கள்ல ஆறுதல் சொல்லி வந்தாங்க.

வாழ்ந்த கலைஞன்

ரோபோ சங்கரோட பழைய வீடியோக்களையும், போட்டோக்களையும் இப்பவும் மக்கள் ஷேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க. மாரி படத்துல தனுஷோட அவர் பண்ணின காமெடி, வேலைக்காரன் படத்துல சிவகார்த்திகேயன் கூட பண்ணின கவுண்டர்கள்னு எல்லாமே இப்பவும் ட்ரெண்டிங்தான். ஒரு கலைஞனுக்கு, தான் இறந்ததுக்கு அப்புறமும் மக்களோட மனசுல உயிரோட இருக்கிறது பெரிய வரம் தான். அதேபோல, அவரோட சிரிப்பும், நல்ல மனசும், அவர் விட்டுட்டுப் போன நினைவுகளும் எப்பவும் நம்ம மனசுல இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+