Roja Serial: ஒரு விஷயம்... பரபரக்கும் வீடு...செம சீன்!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருது. இந்த சீரியலின் படப்பிடிப்பே ரொம்ப வித்தியாசமாக அதே சமயம் பார்க்கவும் நன்றாக இருக்கிறது.
ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில் ஒரே லொக்கேஷனில் என்று காட்சிகள் இருந்தாலும், அதை சுவைபட ஷூட் செய்து, நல்ல வசனங்களில் காட்சியை மெருகேற்றி எபிசோடை முடிப்பது இயக்குநரின் சாமர்த்தியம் என்று சொல்லலாம்.
அந்த விதத்தில் ரோஜா சீரியல் மக்களின் மனதை மிகவும் கவர்ந்துள்ளது.இதில் அன்னபூரணி அம்மாவாக நடிக்கும் வடிவுக்கரசி சூப்பர் நடிப்பு.
வைர அட்டிகையை காணோம்
அன்னபூரணி அம்மா குல தெய்வத்துக்கு சாத்த வச்சிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர அட்டிகையை காணோம்னு சொல்லி தேடிகிட்டு இருக்காங்க. அறையில் பீரோ லாக்கரில் வச்சிருந்த வைர அட்டிகையை சாவி போட்டு திறந்து எடுத்தது யார் என்பது கேள்வி.ஆனால்,ரோஜா மீதுதான் பாட்டிக்கு சந்தேகம்.
ரோஜா மட்டும்
எல்லாரும் இந்த வீட்டு மனுஷங்க..யாரும் வைர அட்டிகையை எடுத்து இருக்க மாட்டாங்க. ரோஜாதான் வெளியில் இருந்து வந்தவ. நகைக்கு ஆசைப்பட்டு அவதான் எடுத்து இருப்பான்னு பாட்டி உறுதியா சொல்லிடறாங்க. பொண்டாட்டியை குறை சொல்வதற்கு ஆதாரம் இருக்கான்னு அர்ஜுன் கேட்கிறான்.
போலீஸ் வரட்டும்
ஆதாரம் எதுக்கு... போலீஸ் வரட்டும்.அவங்க வந்து விசாரிக்க வேண்டியவங்களை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிச்சா உண்மை தானா தெரியப் போகுதுன்னு சொல்லி.போலீசுக்கு போன் பண்றாங்க அன்னபூரணி அம்மா. வீட்டில் அன்னபூரணி அம்மாவின் இரண்டு பிள்ளைகள். மருமகள், மகள், மாப்பிள்ளை, ரோஜா,அர்ஜுன், பேத்தி அணு எல்லாரும் கூடி இருக்கிறார்கள்.
வந்தாச்சு போலீஸ்
சீரியல் நடிகை ராணிதான் போலீஸ் இன்ஸ்பெக்டரா நடிச்சு இருக்காங்க.ஒரு எபிசோட் முழுக்க வைர அட்டிகையை காணோம்..ரோஜா மீது சந்தேகம்..போலீஸ் குரூப்பா வந்து விசாரிக்கறாங்க. இதுதான் கதை..இதை காட்சி படுத்தி, வசனங்களை பேச வைத்து சுவையாக ஷூட் செய்து காட்சியை பரபரப்பாக காண்பித்து எபிசோடை தொடர வைத்து இருப்பது அருமை!
அர்ஜுன் லாயர்
ரோஜாவை இப்படி போலீஸ் விசாரிக்கிறாங்க.. ஆசை கணவன் அர்ஜுன் சும்மா இருக்கானே என்று பார்த்தால், போலீஸ் எப்படி விசாரிக்க கூடாதோ, அப்படி விசாரிக்கறாங்கன்னு ஆதாரம் கேமிராவில் பதியட்டும் என்று காத்திருந்து பின்னர் எச்சரித்தும், மனைவி ரோஜாவை அனைத்து அவளது பயத்தை போக்குவதும் நல்ல காட்சிகள்.