Sembaruthi Serial: கண்ணாடி வளையல் ஆதி தொட்டதும் நழுவிக்கொண்டு போகிறதே...!
சென்னை: கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்பார்கள். இப்படி நமது முன்னோர்கள் பழமொழியாலேயே பல அர்த்தங்களை உணர்த்தி விடுவார்கள்.
அதிருக்கட்டும் இங்கு நாம் எதற்கு இந்த பழமொழியை சொன்னோம் என்றால், ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் எஜமானி அம்மா அகிலாண்டேஸ்வரியின் முதல் மகன் ஆதியும், தனது மகள் பார்வதியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று நினைத்துதான் தந்தையும், அம்மாவின் கார் டிரைவருமான சுந்தரம் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கார்.
ஆனால், இவர்கள் இருவரும் ரகசியமாக கோயிலில் கல்யாணம் செய்துகொண்டது சுந்தரத்துக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.

முக்கியம் கவுரவம்
எனக்கு பரம்பரை பரம்பரையான குடும்ப கவுரவம் தாங்க முக்கியம். இந்த கவுரவத்துக்கு என் உயிரையும் விடணும்னு சூழ்நிலை அமைந்தால் அதையும் செய்வேன்னு அகிலாண்டேஸ்வரி தனது கணவரிடம் ஆவேசமாக சொல்லி இருக்கார். இந்த நேரத்தில்தான் அந்த பழமொழி பொருந்தும் பாருங்க. வீட்டில் இப்படி பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. ஆதி, பார்வதிக்கு கண்ணாடி வளையல் வாங்கிட்டு வர்றான்.

சின்ன வளையல்
பார்வதி இங்கே வான்னு வீட்டுத் தோட்டத்துப் பகுதியில் நின்னு ஆதி கூப்பிடறான். என்ன மாமான்னு கேட்டுகிட்டு அருகில் போறா பார்வதி. இந்தா உனக்கு கண்ணாடி வளையல்னா ரொம்ப பிடிக்குமே.. அதான் வாங்கிட்டு வந்தேன்னு சொல்றான். அவளும் ஐ..ன்னு சொல்லிட்டு வளையலை வாங்கி கையில் நுழைக்கிறாள். சின்ன சைஸ் வளையலா இருக்கு மாமான்னு சொல்றா.

பார்த்துதான் வாங்கினேன்
இல்லையே அளவு பார்த்துத்தான் வாங்கினேன்.. உன் கையைக் கொடுன்னு இவன் கேட்க... அவள் தன் கையை ஆதியிடம் கொடுக்கிறாள். அவன் மெதுவாக இதமாக வளையலை போட்டு விடுகிறான்.செம்பருத்தி பூ போல மலர்ந்து விரிந்து இருக்கும் அவள் முகம் வெட்கத்தில்.. வளையலோ நெகிழ்ந்து அவளது கைக்குள் போகிறது.

இன்னொரு குஷி
பார்வதி உன் அப்பாகிட்டே சொல்லிட்டியான்னு கேட்கறான் ஆதி. ஆமாம் மாமா என்னை எப்படியும் பெரிய அம்மாவை சமாதானம் செய்து சின்னய்யா என்னை கல்யாணம் செய்துக்குவாருன்னு தீர்மானமா சொல்லிட்டேன் மாமான்னு சொல்றா. அப்பா..எனக்கு இப்போதுதான் பார்வதி சந்தோஷமா இருக்கு.நீ அப்பாகிட்டே இப்படி கறாரா பேசுவியோ பேசமாட்டியோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்னு சொல்றான்.
அதுக்குத்தான் ஆரம்பத்தில் அந்த பழமொழியை குறிப்பிட்டு இருந்தோம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications