பூவை சரிசெய்தபடியே .. மயக்கும் பார்வையால் பார்ப்பவர்களுக்கு கிக் ஏற்றிய ஷபானா
சென்னை : ஒரு பூவே பூவை கொஞ்சுவது போல தன்னுடைய செல்ல கைகளால் தலையில் இருக்கும் பூவை மெல்ல வருடி ரசிர்களை லயிக்க வைத்துள்ளார் ஷபானா.
கரு விழிகளால் ரசிகர்களை காந்தம் போல இழுத்து இப்படியெல்லாம் கூட ஈர்க்க முடியுமா என பார்ப்பவர்களை கன்பியூஸ் ஆக்கி இருக்கிறார்.
ரொம்ப நாளுக்கு பிறகு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டாலும் பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் இவருடைய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

மாடல்
இவர் காலேஜ் படிக்கும்போதே மாடலாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். தன்னுடைய ஆசைக்காக மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தாலும் அதன் மூலம் இவருக்கு மலையாள சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இவர் முதன்முதலில் மலையாள சீரியலான 'விஜயதசமி 'எனனும் சீரியலில் 2016இல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் .இந்த சீரியலில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வந்தவருக்கு ஒரு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.

செம்பருத்தி நாயகி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் 2017 இல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இந்த சீரியல் தற்போது வரையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது . தான் எதிர்பார்த்த வரவேற்பு சீரியலிலே கிடைத்ததால் இவர் சினிமாக்களில் நடிக்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார் .செம்பருத்தி சீரியல் தான் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் சீரியலாக இருந்து வருகிறது.

வெற்றிக்குக் காரணம்
செம்பருத்தி சீரியலின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் .இவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது .இந்த சீரியலில் முதலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் இந்த சீரியலில் இருந்து விலகியதும் சீரியல் ரசிகர்கள் அதிருப்தியில் தான் இருந்தனர் . ஆனால் தொடர்ந்து இவருக்காக இந்த சீரியலை பார்த்து வருகிறோம் என ஷபானாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஸனுக்கு பல ரசிகர்கள் அடிமையாக மாறி விட்டனர்.

அதிக ரசிகர்கள்
ஆனால் கேமரா முன்பு மட்டும்தான் இவர் க்யூட்டாக நடிப்பாராம். மத்த நேரங்களில் அவருடைய பிரண்ட்ஸ் களான பூவே பூச்சூடவா ரேஷ்மா ,யாரடி நீ மோகினி நட்சத்திரா , சைத்ரா ரெட்டி ,ஸ்ரீநிதி இவர்களுடன் இருக்கும்போது செம சேட்டை செய்யும் வாலு இவர்தானாம் .இவர்களின் குரூப்பில் அதிகமான சேட்டை செய்து கொண்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போல இருப்பாராம் .இவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

செம சேட்டை
தற்போது புடவையில் க்யூட்டாக அமர்ந்துகொண்டு கண்ணாலே இவர் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து இவருடைய ரசிகர்கள் இவரை கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அதில் பலரும் அழகே பொறாமைப்படும் பேரழகு நீங்கதான் என ஐஸ் வைத்து வருகின்றனர் . அதுமட்டுமல்லாமல் செல்லமே ,தங்கமே என்றும் செல்லப் பெயர்களால் கொஞ்சியும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications