இந்த நபர் மட்டும் இல்லன்னா என் வாழ்க்கையே முடிந்திருக்கும்.. மனம் திறந்த கே.எஸ் சித்ரா
சென்னை: பாடகி கே.எஸ் சித்ராவின் பாடல்கள் சோகத்தில் இருக்கும் பலருக்கும் மனதிற்கு ஆறுதல் கொடுத்து வருகிறது.
ஆனால் பாடகி சித்ரா மன சோர்வில் இருக்கும் போது அவருக்கு ஆறுதல் கொடுத்தது ரேகா ராமச்சந்திரன் என்ற நபர் தானாம்.
தான் மீண்டும் பாடல் பாடுவதற்கு காரணமும் ரேகா ராமச்சந்திரன் தான் என்று கூறி அதற்கான காரணத்தையும் சித்ரா பகிர்ந்து இருக்கிறார்.

சின்ன குயில் சித்ரா, மெலடி குயின், நைட்டிங்கேல், வானம்பாடி, சங்கீத சரஸ்வதி, புன்னகை அரசி என பல பெயர்களால் அழைக்கப்படும் பாடகி சித்ரா பாடிய பாடல்கள் பலருடைய ஃபேவரைட் வரிசையில் இடம் பிடித்து இருக்கும். 80ஸ் ஹிட்ஸ் களாக இருந்தாலும் சரி 2கே கிட்ஸ்களாக இருந்தாலும் சரி சித்ராவின் பாடலுக்கு பலர் அடிமைகளாகவே இருக்கின்றனர்.
தூக்கம் வரவில்லையா? அப்பவும் சித்ராவின் பாடல் தான். இல்லை மனது சந்தோஷமாக இருக்கிறதா? அப்போதும் சித்ராவின் பாடல் தான். தத்துவமா அப்போவும் சித்ராவின் பாடல் இருக்கு, பயபக்தியும் தோன்றி விட்டால் அங்கேயும் சித்ராவின் பாடல் இருக்கு என விதவிதமாக இதுவரைக்கும் 12 ஆயிரம் பாடல்களுக்கு மேலே பாடிய சித்ரா தற்போது எஸ்பிபி சரண், விஜய் யேசுதாஸ் போன்ற அடுத்த தலைமுறை பாடகர் ஓடும் பாடிக்கொண்டிருக்கிறார்..
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள், சந்தோஷங்கள் போன்றவற்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் சில இடங்களில் பாட்டு பாட போகும்போது என்னிடம் உருக்கமாக சிலர் பேசுவார்கள். அதுவும் ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" எனும் பாடல்களை பலரும் பாராட்டுவார்கள். அந்த பாடலால் எங்களுடைய வாழ்க்கை மாறி இருக்கிறது என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் அதற்க்கு எனக்கு கிரீடிட் கிடையாது. அந்த பாடலை எழுதியது பா விஜய் தான். அவர்தான் அந்த கிரீடிட்க்கு சொந்தமானவர். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் என்றால் சென்னையை சார்ந்த ரேகா ராமச்சந்திரன் தான். இவர் சென்னையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் ஹாஸ்டலை நடத்தி வருகிறார். இவர் தான் எனக்கு ஒரு ஹாட் பாதர் என்று சொல்லும் வகையில் இருப்பவர்.
நான் என்னுடைய வாழ்க்கையில் மொத்தமாக உடைஞ்,சு இவ்வளவுதான் என்று சோகத்திற்குள் உறைந்த நேரத்தில் எனக்கு ஒரு வழிகாட்டியாகவும் தைரியம் கொடுத்தவர் என்றால் அது ரேகா ராமச்சந்திரன் தான். அவர் அவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் அந்த நேரத்தில் என்னை நேரில் சந்தித்து ஆறுதலாக பேசுவார். எப்போதும் நேர்மறையான சிந்தனையோடு பேசிக் கொண்டிருப்பார். அதை பார்த்து தான் நான் என்னுடைய சோகங்கள் எல்லாம் மறந்து வெளியே வந்தேன்.
மீண்டும் பாடகியாக வந்ததற்கு முக்கிய காரணமும் அவர்தான். அந்த நேரத்தில் இனி எனக்கு எதுவுமே தேவையில்லை என்று நான் மனதொடிந்து போயிருந்த நேரத்தில் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் எதிர்காலங்கள் கடந்த காலங்கள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று தான் சித்ராவின் ஒரே மகளின் இறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி கே.எஸ் திருமணத்திற்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு தான் நந்தனா எனும் பெண் பிறந்து இருக்கிறார். ஆட்டிசம் பாதித்த அவர் குழந்தை மீது சித்ரா அதிகமான பாசமாக இருந்திருக்கிறார். அதனால்தான் எங்கே சென்றாலும் குழந்தையும் கூட்டிக் கொண்டே சென்றாராம். அப்போதுதான் துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய குழந்தையோடு சித்ரா சென்று இருந்த இந்நிலையில் அங்கே உள்ள நீச்சல் குளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து குழந்தை நந்தனா மரணம் அடைந்திருக்கிறார்.
இது சித்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய துயரம்தான். புத்திர சோகம் பெரும் சோகம் என்று பலரும் சொல்வார்கள். அந்த மாதிரி தான் ஒரு நிலைமையில் சித்ரா இருந்தாலும், பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்களை பாடிக்கொண்டு எப்போதும் அவருடைய முகத்தில் புன்னகை தழும்ப விட்டு பார்க்கும் நபர்களுக்கும் அவருடைய பாசிட்டிவ் எனர்ஜி வந்துவிடும் அளவில் வலம் வருகிறார். இந்த நிலையில் தற்போது சித்ரா பேசிய கருத்துக்கு ரசிகர்கள் ஆறுதல்கள் கூறி வருகிறார்கள்.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications