சிறகடிக்க ஆசை: எலுமிச்சை பழத்தால் மனோஜ், விஜயாவை மாட்டவைத்த முத்து.. ஆனால் அண்ணாமலை முடிவு இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து பிளான் போட்டபடி எலுமிச்சை பழத்தை வைத்து விஜயாவையும் மனோஜையும் சிக்க வைத்தாரா? இல்லையா? என்பது தெரியவந்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரத்தில் மனோஜ் ஏமாந்த 4 லட்சம் பணத்திற்காக மீனாவின் நகைகளை விற்றிருக்கிறார். அதே நேரத்தில் தங்க நகை கவரிங்காக மாறியிருக்கும் விஷயம் முத்து மற்றும் மீனாவிற்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் பாட்டியின் பிறந்தநாளுக்கு பிறகு இது பற்றி பேசிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த முத்துவிற்கு விஜயா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அதாவது கவரிங் நகை மீனாவின் வீட்டில் தான் மாறி இருக்கிறது என்று விஜயா அடித்து சொல்ல இந்த உண்மையை நானே கண்டுபிடிக்கிறேன் என்று முத்துவும் சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் செல்வத்திற்கு பிரிட்ஜ் வாங்குவதற்காக போயிருந்த இடத்தில் முத்துவும் செல்வமும் போலீசில் கைது செய்யப்படுகின்றனர். அப்போது அங்கு ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் தான் 4 லட்சம் பொருள்கள் ஏமாந்து போன விஷயத்தைப் பற்றி சொல்ல அதை வீடியோவாக எடுத்த முத்து வீட்டில் போட்டு காட்டி உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

ஆனாலும் நகை விஷயத்தில் உண்மையை முத்துவால் சொல்லவைக்க முடியவில்லை. இந்த நிலையில் மீனா கொடுத்த ஐடியா படி ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்த முத்து அண்ணாமலையிடம் இந்த எலுமிச்சம் பழம் ஒரு சாமி தந்தது.

இது வீட்டில் இருந்தால் நகையை யாரு கவரிங்காக மாற்றினார்கள் என்பது தெரிந்துவிடும். உண்மையா நகையை மாற்றியவர்களுடைய வாய் கோணலா மாறிவிடும் என்று சொல்ல, அதைக் கேட்டு மனோஜும் விஜயாவும் பயத்தில் இருக்கின்றனர். அதனால் அந்த எலுமிச்சம்பழம் வீட்டில் இருந்தால் தானே நமக்கு பிரச்சனை என்று அந்த எலுமிச்சை பழத்தை எடுக்கும் போது முத்து கையும் களவுமாக பிடித்துக் கொள்கிறார்.

அதோடு நீங்கதான் நகையை மாற்றியது என்பதை எல்லாருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக தான் சாதாரண எலுமிச்சம்பழத்தை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்தேன் என்று சொல்ல, மனோஜூம் விஜயாவும் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை இதற்கு என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

வழக்கம்போல அண்ணாமலை சரி உண்மை தெரிஞ்சிடுச்சுல்ல, இனி அவங்கவங்க வேலையை பாருங்க என்று இருக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்புதான் எல்லோருக்கும் இருக்கின்றது. இது குறித்து ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் ஸ்ரீதேவா நீங்க நினைச்ச மாதிரி இல்லை இப்போ டுவிஸ்ட் இருக்கப் போகிறது என்று கூறியிருக்கிறார். இதனால் அண்ணாமலை நாளை என்ன சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications