நல்லவேளை, ராஷ்மிகாவுக்காக ஓடோடி வந்த பழங்குடியினர்.. நடிகையை சுற்றி பின்னப்பட்ட தந்திர வலை: பிரபலம்
சென்னை: தன்னுடைய சினிமா வாழ்க்கையை கர்நாடகாவில் தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை ராஷ்மிகா புறக்கணித்துவிட்டதால், தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கன்னட ஆர்வலர் டி.ஏ.நாராயண கவுடா ராஷ்மிகாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இதையடுத்து, கொடவா பழங்குடியினத்தை சேர்ந்த ராஷ்மிகாவிற்கு பாதுகாப்பை கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இதுகுறித்து கருத்து கூறியிருக்கிறார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன்.. அதில், "நடிகை ராஷ்மிகாவுக்கு எதிராக கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏவே கண்டன கருத்துக்களை சொல்லி வருகிறார்.. அதுதான் பெரிய அதிர்ச்சியாக உள்ளது.. அரசியல்வாதிகள், ஒரு நடிகையை ஏன் திட்டமிட்டு இவ்வாறு சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

ராஷ்மிகா என்ன பேசினார்
சினிமா என்ற துறைக்குள் அரசியல் நுழைந்துள்ளது.. கர்நாடகாவை பொறுத்தவரை மொழிப்பற்று அதிகம்.. தங்களுடைய மொழியின் மீதும், இனத்தின்மீதும் ஒட்டுமொத்தமாக முடிச்சு போட்டு பேசும்போது, ராஷ்மிகாவுக்கு எதிராக திரள்வதாக கூறுகிறார்கள்.
"கர்நாடகாவா? பெங்களூரா? அது எங்கே இருக்கு" என்று ராஷ்மிகா கேட்டதாக, காங்கிரஸ் எம்எல்ஏ குற்றஞ்சாட்டுகிறார்.. கர்நாடகாவில்தான், ராஷ்மிகா பிறந்து, வளர்ந்து, படித்திருக்கிறார்.. அப்படியிருக்கும்போது, சொந்த மாநிலத்தை எப்படி குறை சொல்வார்? தெலுங்கு போலவே கர்நாடகாவிலும் இன்று பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா.
கசப்பான சம்பவங்கள்
ஒருவேளை தான் திருமணம் செய்து கொள்ள போகுமிடம் ஆந்திரா என்பதால், ஒருவேளை பெங்களூர் நிகழ்ச்சிகளை ராஷ்மிகா புறக்கணித்திருக்கலாம் அல்லது கசப்பான விஷயங்கள் ஏதாவது ராஷ்மிகாவுக்கு கர்நாடகாவில் நடந்திருக்கலாம். ஒரு இடத்தை பிடிக்காமல் போல பல காரணங்கள் இருக்கலாம். "என்னுடைய ஊர்" என்று ஆந்திராவை உணர்ச்சிவசப்பட்டு சொல்லியதாக தெரிகிறது. இதைவைத்தே கர்நாடகாவில் ராஷ்மிராவுக்கு எதிரான அலையை உருவாக்க நினைக்கிறார்கள்.
தேவையில்லாத மன உளைச்சல்
ராஷ்மிகா பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த இனத்தை சார்ந்தவர்கள், ராஷ்மிகாவுக்கு சப்போர்ட்டாக களமிறங்கியிருக்கிறார்கள். ஏதோ தனிப்பட்ட கருத்து அல்லது மோதல் இருக்கவே செய்கிறது.. அதுக்காக, சாதாரண பிரச்சனையை மாநில பிரச்சனையாக மாற்றி கொண்டிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
நாளைக்கு கர்நாடகாவில் ராஷ்மிகா படம் வெளியானால் அதை தடை செய்ய முடியாது.. ஒன்றிரண்டு நாள் தடுத்தாலும், அதை தொடர முடியாது. ஆனால் தேவையில்லாமல் மனஉளைச்சலை ராஷ்மிகாவுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications