எப்போ பார்த்தாலும் போட்டோவைத்தான் கொஞ்சுவீங்களா.. நேரில் வாங்க மாமா!
சென்னை: சன் டிவியின் பிரியமானவள் சீரியல் பேரில் பிரியம் இருக்கும் அளவுக்கு கதையில் பிரியமானவர்கள் இல்லைங்க... போலீஸ் உத்தியோகத்தை வச்சுக்கிட்டு வீண் பழி, கொலை, அடிதடி, ஆட்கடத்தல்.. ஐயோ.. ஐயோ.. முடியலைங்க.
உமா குடும்பம் பாசமான குடும்பம்.. அவங்க அனுபவிக்கற கஷ்டம் இருக்கே.. உமாவும் ஏதாவது ஒரு மருமகளும் கொலைப்பழியை சுமக்கறதே பிழைப்பா போச்சு. இப்போது கவுதமை கொன்னுட்டதா வீண் கொலை பழியில புத்தம் புது மருமகளுடன் ஜெயிலில் அடிவாங்கி வேதனை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க உமா.

கவுதம் உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்ட உமாவின் புள்ளைங்க, அவன் கூட மானங்கெட்ட மாப்பிள்ளைன்னு மாமியார் அழைக்க வெட்கமே இல்லாம மாமியார் கூடவே கூட்டு சேர்ந்து கெட்டவங்களுக்கு துணை போகும் ஜம்புவும் கவுதம் கூட இருக்கறதை தெரிஞ்சுக்கறாங்க.

ஜம்புவை வரவழைக்க அவன் பொண்டாட்டி சுமதிதான் சரியான சாய்ஸுன்னு உமா புள்ளைங்க சுமதியை வர சொல்றாங்க. சுமதி வந்த உடனே ரொமான்ஸா பேசி ஜம்புவை வரவைங்கன்னு சொல்றாங்க.

பேசறேன்.. ஆனா, திடீர்னு ரொமான்ஸா பேசினா அந்த மனுஷன் நம்புவானோ, மாட்டானோ தெரியலையேன்னு சொல்லிட்டு ஜம்புவுக்கு போன் போடறா. அவன் ஒரு நடிகையை போனில் பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டு இருக்கான்.

போனை எடுத்து ஹலோ சொல்ல, எந்த நடிகை போட்டோவை வச்சுக்கிட்டு கொஞ்சிகிட்டு இருக்கீங்கன்னு கேட்கறா.. இல்லடா செல்லக்குட்டி.. உன் போட்டோவைத்தான் மாமன் பார்த்து கொஞ்சிகிட்டு இருக்கேன்னு சொல்றான்.

போட்டோவையே பார்த்து கொஞ்சிகிட்டு இருந்தா எப்படி மாமா.. நேர்ல வர வேணாமா... இங்க இருந்த வரைக்கும் உன் அருமை தெரியலய்யா.. இப்போதுதான் உன் நினைப்பா இருக்கு.. போட்டோவையே பார்த்து கொஞ்சுகிட்டு இருக்காம நேர்ல வா மாமான்னு சொல்றா..
செல்லக்குட்டி நிஜமாத்தான் சொல்றியான்னு அவன் துள்ளிக் குதிச்சு கேட்க, பின்னே பொய்யா சொல்றேன்.. கிளம்பி வாய்யான்னு சொல்றா.. இதோ கிளம்பிட்டேன் செல்லக்குட்டின்னு வர்றான் ஜம்பு... இப்படி போகுது பிரியமானவள்.












Click it and Unblock the Notifications